9. நிருலெட்சுமிகேசன்

412 65 22
                                    

இருவரும் அன்று கல்லூரி வரவில்லை என்றதும் சோகமான மாறன் "என்ன கொடுமை சரவணா? கேண்டின் போக நான் வச்சிருந்த இரண்டு அடிமைகளும் சொல்லி வச்ச மாதிரி லீவ் போட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களே?" என்று புலம்பியபடி தானே தனியாக கேண்டினை நோக்கி சென்ரு கொண்டுருந்தவன், அபினவைப் பார்த்ததும் நின்றான். 

அவனோ இன்றும் வர்ஷிகாவுடன் நேரம் செலவழிக்க முடியாதென மனதுள் நொந்து கொண்டான்.

"ஹே, அபி எப்படி இருக்க? இங்க என்ன பண்ணுற?"

"ஹாய் மாறன் சார். நல்லாருக்கேன்." என அபினவ் முழிக்க.

"ஏன் முழிக்கிற? உன் டிபார்ட்மெண்ட் இங்க இல்லையே? அப்புறம் இங்க என்னப் பண்ணுறனு கேட்டேன்.?" என்றான் மிரட்டலாக.

"என் ஃப்ரெண்ட்ஸ் இந்த டிபார்ட்மெண்ட்லயும் இருக்காங்க சார். அதான் அவங்களைப் பார்க்க வந்தேன்." என்றான் சமாளிக்கும் விதமாக.

அதற்குள் அங்கு வந்த வர்ஷிகாவை கண்ணசைவில் அங்கிருந்து போக சொல்லி அவளை அனுப்பி வைத்தான் அபினவ்.

அதனை கண்டும் காணாமல் இருந்த மாறன் “சீக்கிரம் ஃப்ரெண்ட்ஸ பார்த்துட்டு க்ளாஸ்க்குப் போ."

"சரிங்க சார். தாங்க் யூ."
"அட ஆண்டவா! ஊர்ல காலேஜே இல்லாத மாதிரி இங்க தான் படிப்பேனு சேர்ந்தேன்ல.. நட்பு  மண்ணாங்கட்டினு தேவை தான்.” என்று புலம்பியவாறே தன் வகுப்பை நோக்கிச் சென்றான்.

அங்கு கதிரின் வீட்டிலோ,  “சம்மந்திய கூப்பிட்டு நாம வீட்டுக்கு நல்ல படியாக வந்துட்டோம்னு சொல்லிட்டீங்களா?” என்றார் மீனாட்சி.

“இப்போ தான் பேசினேன் மீனா. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நம்ம கதிர அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”  என்றார் கலைவாணன்.

“ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்க. நமக்கேத்த மாதிரி. முடிஞ்சளவு சீக்கிரம் கல்யாணத்த வச்சுடலாங்க, தள்ளிப்போட வேண்டாம்.” என்றார் மீனாட்சி.

கதிரழகிWhere stories live. Discover now