33.தீபா செண்பகம்

328 54 14
                                    


"தன்னெஞ்சறிவது பொய்யற்க , பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்" இது வள்ளுவர் வாக்கு.

ஆனால் பொய் சொன்ன பிறகும், அதற்காக வருந்தாமலும் , திருந்தாமலும், தனக்கு அதனால் ஆபத்து என ஒன்று வரும் வரை, மௌனம் காப்பதும் தற்போதைய காலத்தில் மனித இயல்பாக மாறி வருவது துரதிர்ஷ்டவசமானது.

இங்கு அம்சவேணியும், தனது சுயநலத்திற்காக தன் சொந்த அண்ணன் மகள் எனவும் பார்க்காமல் எழிலழகியின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டார்.

தான் செய்த செயலின் பலனாக திருமணம் மட்டும் தடைப்படும், பிறகு ஏதாவது நாடகமாடி தன் மகனுக்கு அவளை மணம் முடிக்கலாம் என்பது மட்டுமே அவளது நோக்கமாக இருந்ததே தவிர, இன்று இவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருக்கவில்லை...

மாறனுடன் பேசும் பொழுது அவனின் திட்டத்தை அறிந்த கதிர், "தேவையில்லாம என்னால நீ எந்த பிரச்சனையிலும் சிக்க வேண்டாம் மாறா. சோ, நான் ஒரு முயற்சி செய்ய போறேன். அதுக்காக தொடர்ந்து அம்சவேணியம்மாவை மட்டும் உன் பிரெண்ட்கிட்ட மிரட்டச் சொல்லு" என்றான்.

"அதையும் உங்க பிரண்டு தான் செய்வாரு அண்ணா" என்று புன்னகைத்தபடி பாலாஜியை கை காட்டினான் மாறன்.

"டேய் பாலா!" என நண்பனைக் கட்டியணைத்துக் கொண்ட கதிர், "ஏன்டா வெளிநாட்டு வேலைன்னு போனவன், எப்ப வந்த? சொல்லவே இல்லை. மாறனை  உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேள்விகளை அடுக்கினான்.

" உனக்குத் தான் தெரியுமே, அப்போவோட ஹோட்டல் பிஸ்னஸ், எனக்குச் செட்டாகாதுன்னு தான் ஸ்டேட்ஸ் போனேன். ஆனால் இந்தக் கம்யூட்டர் ஃபீல்டு ஓர்க் ப்ரஸர் தாங்கலை. இல்லாத வியாதி எல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சு. அதான் நம்ம ஊருக்கே விட்டா போதும்னு திரும்ப ஓடி வந்துட்டேன். அப்பாவுக்கும் இப்போ எல்லாம் உடம்புக்கு முடியலை, அது தான் அவர் பிஸ்னஸை, என் ஸ்டைல்ல கொஞ்சம் மாத்தி செய்யலாம்னு "foodies food" னு, உலகத்தில உள்ள எல்லா சாப்பாடு வகைகளையும், ஒரே இடத்தில் கிடைக்கிறமாதிரி ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பித்து இருக்கேன்" என்று அவன் தனது கதையைச் சொல்லவும். கதிர் மாறனைப் பார்த்து சிரித்தபடி, "உனக்கு வேட்டை தான்" என்றான்.

கதிரழகிWhere stories live. Discover now