40.ஆர்த்தி பார்த்திபன்

290 53 16
                                    

40 ஆர்த்தி பார்த்திபன்

எங்கும் பசேலென இருந்த அந்த மலையின் இயற்கை எழிலும், ஆங்காங்கே பூத்துக் குலுங்கிய வண்ண பூக்களும் கதிரின் மனநிலையை மாற்றி இருந்தன. அவன் நண்பர்கள் அனைவரும் கூச்சலிட்டு, பாட்டு பாடி உற்சாகமாக இருந்த போதும் கதிரின் மனதில் மட்டும் எழிலின் நினைவுகளே ஓடிக் கொண்டிருந்தன.

அவள் கல்லூரியில் இருந்து கிளம்பி மூன்று நாட்கள் கழிந்து இருந்தது. அந்த மூன்று நாட்களில் அவள் அவனிடம் ஒருமுறை கூட பேசவும் இல்லை, அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள் எதையும் பார்த்ததாகவும் தெரியவில்லை, இதெல்லாம் அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தன.

"என்ன பாஸ், நாங்க இங்க இவ்வளவு ஜாலி பண்ணிட்டு இருக்கோம், நீங்க என்னடான்னா இவ்வளவு சைலண்ட்டா வரீங்களே!" என்றான் பாலாஜியின் நண்பனான லோகேஷ்.

"அவரோட மனசு இங்க இருந்தா தானே, அதுதான் ஹாஸ்டல்ல இருந்து வேலூருக்கு போயிருக்கே, அதான் அவரு எதையும் ரசிக்குற மூட்ல இல்ல" என்றான் முகில் சிரித்து கொண்டே.

"ஓ! உங்களுக்கும் லவ் பிராப்ளமா? இதோ இருக்கானே ரமேஷ் இவனுக்கும் அதே பிராப்ளம் தான். ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் இவன் லவ் பிரேக் அப் ஆச்சு, அதுக்காக தான் இந்த ட்ரிப்புக்கே பிளான் பண்ணுனோம், பிரேக் அப் பார்ட்டி" என்றான்.

கதிர் அவர்கள் முகத்தை வினோதமாக பார்த்தான்.

"டேய்! கொஞ்ச நேரம் அமைதியா வாங்க டா, நானே கஷ்டப்பட்டு அவனை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன் நீங்க எதாவது சொல்லி அவனை கடுப்பேத்தி இங்க இருந்து கிளம்ப வச்சுறாதீங்க" என்றான் பாலாஜி. அதற்கு பிறகு அவர்கள் கதிரிடம் எதுவும் பேசவில்லை.

ஒருமணி நேரத்திற்குள் அவர்கள் தங்க வேண்டிய ரிசார்ட்டை அடைந்தார்கள்.

கதிர் எதிலும் ஈடுபாடு இல்லாமல் தனியாக நின்று எதை பற்றியோ தீவிரமாக யோசித்து கொண்டு இருப்பதை கவனித்த பாலாஜி அவன் அருகில் வந்தான்.

கதிரழகிWhere stories live. Discover now