32. சஹானா ஹரிஷ்

298 48 29
                                    

தவறு செய்பவர்களுக்கு அதைச் செய்யும் போது இல்லாத பதட்டம் மற்றவர்களிடம் மாட்டிக் கொள்ளும் போது தானாய் வந்துவிடுகிறது..

அந்த நிலையில் தான் இருந்தார் அம்சவேணி, என்ன தான் கோபங்கள் இருந்தாலும் தன் தமையனின் மகள், அதுவும் தான் ஆசையாய் தூக்கி வளர்த்த சின்ன சிறு பெண், அவளுக்கு அப்படி ஒரு கொடூரத்தை செய்ய துணிந்தது எதனால்? இந்த கேள்வியை பலமுறை கேட்டும் தனக்குள் எழுந்த ஆதங்கமே அதற்கான காரணம் எனத் தெள்ள தெளிவாக உரைத்தது மனம்.

இந்த விஷயம் வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிந்தால் கூடப் பரவாயில்லை, ஆனால் தயாளனுக்குத் தெரிந்து விட்டால்? அதை நினைக்கும் பொழுதே கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் முத்துக்கள்.

நடப்பது நடக்கட்டும் என அந்த முகம் தெரியாத நபர் சொன்ன இடத்திற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்து விட்டு வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

இங்கே, அழகியிடம் கதிர் பேசிய வார்த்தைகள் தயாளனின் காதுக்குள் ரீங்காரமிட்டது.

'அம்சவேணி அப்படிப்பட்டவள் இல்லை என பாசம் கொண்ட மனமோ வாதிட்டது, ஆனா மூளையோ அவன் ஏன் அப்படி செய்திருக்க மாட்டாள்?'எனக் குழப்பி விட்டது..மொத்தத்தில் கதிர் காலையில் வந்து சென்றதிலிருந்து அவரின் மனம் நிலையில்லாமல் தவித்தது.

திவ்யாவிற்கு வீட்டு வேலைகள் இழுத்துக் கொண்டு இருக்க தயாளனின் குழப்பமான முகமும், அழகியின் யோசனையான முக மாற்றமும் கண்ணிற்கு தெரியவில்லை, அகரனும், வருணாவும் வீட்டிலில்லாததால் அவர்களுக்கும் இது தெரிய வாய்ப்பில்லை.

அங்கே, கதிரின் மனமும் குழம்பி தவித்தது, மொத்த பிரச்சனையும் முடிந்தது எனச் சிறிது காலம் கூடச் சந்தோஷப்பட முடியாமல் போனது இந்த அம்சவேணி சித்தியால்.

இதற்கு ஒரு முடிவுக் கட்ட வேண்டும் என யோசிக்கையில் அதற்கான வழி மட்டும் கிடைப்பேனா எனச் சிரித்தது. காலை கல்லூரி கிளம்பும் நேரம் வரை யோசித்தவனுக்கு தலைவலியே மிஞ்சியது.

கதிரழகிDonde viven las historias. Descúbrelo ahora