26. மேகலா தேவராஜன்

319 56 16
                                    

மனதின் பாரம் தாங்காமல் உண்மையை கூறிய எழில் குற்ற உணர்வுடன் தலைகுனிந்து நின்றாள்.

”யாரை காப்பாத்தடா நீ பழியை உன் மேல போட்டுக்கிற..? நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. உன்னை பத்தி எனக்கு தெரியும்..!!  நீ யாரையும் பொய் சொல்லி காப்பாத்த வேண்டாம்..! ”  என்று மகள் கூறிய வார்த்தையை நம்ப மறுத்தார் திவ்யா.

தன் அன்னையின் நம்பிக்கையை உடைக்க போகிறோம்.. என்ற வேதனையில்,

“அயோ அம்மா.. நான் சொல்றது எல்லாம் உண்மை..! எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை..! எவ்ளோ சொல்லியும் நீங்க கேட்கலை... என்னென்னவோ பேசி என்னை சம்மதிக்க வச்சுட்டீங்க...

இருந்தும் எனக்கு இப்போ வேண்டாம்னு உங்கக்கிட்ட சொல்ல வந்தப்ப.. நீங்க இந்த சம்பந்தத்தை நினைச்சு ரொம்ப சந்தோசத்துல இருந்திங்க.. உங்க சந்தோசத்தையும் கெடுக்க கூடாது.. அதே சமயம் இந்த நிச்சயமும் நடக்க கூடாதுன்னு நினைச்சு.. நான் தான் இப்படி செஞ்சேன்..! ஆனால் நான், இப்படி ஆகும்னு சத்யமா நினைக்கலம்மா..! நான் விளையாட்டா செய்ய போய் இப்படி என்னென்னவோ நடந்திருச்சு..” என்று முகத்தை மூடிக்கொண்டு அழுத எழிலை அதிர்ச்சியாக பார்த்தார் திவ்யா..!

இங்கு நடந்த அனைத்தையும், எழிலின் அறைவாசலில் நின்று கேட்டு கொண்டிருந்த அவளின் தந்தை, அதிர்ச்சியில் உறைந்து போனார்.

“பார்த்திங்களா உங்க பொண்ணு செஞ்சிருக்க காரியத்தை.. ஒரு பொய்யான நாடகம் நடத்தி ஒரு நல்ல மனுசனை கலங்கப்படுத்தி, அவரோட வாழ்க்கையை கெடுத்ததும் இல்லாம, இத்தனை நாள் நாம் எல்லாம் இவளை நினைச்சு கஷ்டப்பட்டுட்டு அந்த அப்பாவி மனுஷனை வாய்க்கு வந்தபடி பேசினப்பக்கூட அதை பற்றிய குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம எப்படி அமைதியா இருந்திருக்கா..‼ “ என்று அகரன் ஆதங்கத்தோடு பேச, எழில் கதறிவிட்டாள்.

தமக்கையின் அழுகையை காண முடியாமலும்,  அதே சமயம் அவளின் தவறை மன்னிக்க முடியாமலும் இருதலை கொள்ளி எறும்பாக தவித்தவன், இறுதியில் பாசமே வென்றிட, எழிலின் அருகில் வந்து அவளின் தலையை வருடிவிட்டான் அந்த பாசக்கரத் தம்பி..!    

கதிரழகிWhere stories live. Discover now