நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 86

452 10 0
                                    

86

தாரிகா மனசு படபடக்க மாடிக்கு வந்து பால்கனியில் நின்றாள். கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு யோசித்தாள்.

எல்லாவித மன தெளிவும் பெற்று, ஆர்ஷனை அவள் அணு அணுவாக தனக்குள் பதுக்கி அவனை காதலித்து கொண்டிருந்தாள். அவனில்லாமல் தனது கூந்தல் முடி கூட அசையாது எனும் நிலைக்கு வந்துவிட்டு இருந்தாள்.

நெஞ்சுக்கூட்டில் 'இருக்கும் கணவன் கூட உடல் ரீதியாக இணையும் தருணம். அவனை தனக்குள் உள்வாங்கி அவன் கூட இரண்டற கலக்கும் அந்த உறவு. அது அவளுக்கு இன்பத்தையும், சிலிர்ப்பையும் தராமல் ஒரு வித பயத்தையும் பட படப்பையும் தருவித்தது.

அதுக்கு காரணம் இல்லாமல் இல்லை. எப்படி பாரின் மாப்பிள்ளைகள் மீது தவறான எண்ணம் வைத்து இருந்தாளோ. அதே போல் உடல் ரீதியான உறவையும் பலர் பல விதமாக சொல்லி பயமுறுத்தியதன் விளைவாக அந்த உறவையும் அவள் பயத்துடனேயே எதிர்பார்த்தாள்.

கூட பிறந்த தர்சனா ''மாறன் குடித்துவிட்டுத்தான் தன்னை குதறுவது'' என தாயிடம் சொல்லி அழுததை கேட்டவள், அந்த உறவையே வெறுத்தாள் எனலாம்.

இன்று மணம் முடித்து மனதுக்கு பிடித்தவன், அவள் உணர்வுகளுடன் கலந்தவன் கூட எப்படி அந்த உறவை எதிர் கொள்ள போகிறேன்? எனும் கலக்கமே அவள் ஆர்ஷனை இறக்கி விட சொன்னதும், பதட்டமானதும்.

அதை விட மேனகா வாந்தி எடுக்கும் போது சாந்தா சொன்னதும், இவளுக்கு நிலை கொள்ளா தவிப்பு வந்ததும் அந்த பயத்தின் பிரதி பலனே.

ஆர்ஷன் லக்கேஜை வைத்துவிட்டு மனைவியை பார்த்தான். பலமான சிந்தனை வசப்பட்டு இருந்தாள். பின்னால் வந்து மெல்ல அணைத்தான்.

தாரிகா கணவனை உதறவும் முடியாது, அவனது மூச்சு காற்று சொல்லும் செய்தியை ஏற்றுக்கொள்ளவும் முடியாது தவித்தாள்.

ஆர்ஷன் மனைவியின் கூந்தல் விலத்தி மெல்ல முதுகில் இதழ் பதித்தான். தாரிகா உடல் சிலிர்க்க அவனிடமிருந்து விலக முனைந்தாள். அவனோ மனைவியின் உடல் வாசனையை மோர்ந்து தனக்குள் பரப்பிக்கொண்டிருந்தான். தாரிகா நிலை சொல்ல முடியாத நிலை என்றானது.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now