நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 53

344 12 0
                                    

53

சுபத்திரா கவனிப்பில் தாரிகா உடம்பு தேறியது. ஆர்ஷன் அவள் பக்கம் தலை காட்டினான் இல்லை. ஒரு பேச்சு வைத்துக்கொண்டான் இல்லை.

அபிநவ் தாரிகாவின் தோழி மீனாவை பிடித்து எல்லாம் கறந்து கொண்டான்.

அடுத்த கணமே ஆர்ஷனுக்கு வீடியோ கால் எடுத்து கட கட என ஒரே மூச்சாக சொல்லியும் கொண்டான். மீனாவும் தோழி வாழ்க்கை எப்படியாவது நன்றாக இருக்க வேண்டும். என்று எல்லாம் சொல்லாது சிலவற்றை சொல்லி அவளது பயத்தையும் மனதையும் புரிந்து கொள்ளுமாறு கேட்டு இருந்தாள்.

தாரிகா ஆரம்பத்திலிருந்தே அவன் மீது தவறான கண்ணோட்டம் வைத்து இருந்தது தெரிய வந்ததும் ஆர்ஷனுக்கு முகம் இறுகி போனது. தன் மேல் தனது நடத்தையின் மேல் தப்பான கண்ணோட்டமும் விளக்கமும் தனக்குள் உருவாக்கி வைத்து கொண்டு இந்த நிலைக்கு வந்து இருக்கிறாள் என புரிந்து கொண்டான்.

கோபம் வராதவனுக்கு கூட அது லேசாக எட்டி பார்த்தது.

''பாரினில் இருக்கும் எல்லா பசங்களும் அவள் நினைப்பது போல இல்லை'' என்பதை சொல்லவேண்டும் என்ற கோபம் வந்தது. அந்த விஷயத்தை அவளுக்கு கிளியர் பண்ணியே ஆகவேண்டும் என்ற வேகம் எழுந்தது.

அதே நேரம் அவள் பார்த்த சம்பவங்களும், கேள்விபட்ட விஷயங்களும், சித்தரிக்கப்ட்ட விதமும் தெரிய வந்ததும், அவள் மேல் தப்பு இல்லை என்று ஒரு மனது சொல்லி கொண்டது. தனது நடத்தை மேல் சந்தேகத்துடனேயே கரம் பற்றியவள் இன்றும் அதே மனநிலையிலேயே இருப்பதும், அதை வைத்தே டைவோர்ஸ் கேட்பதும், யோசித்து, யோசித்து பார்த்தவனுக்கு யார் கூடவும் வாழலாம் சந்தேக சாதிகளுடன் வாழ முடியாது. என தோன்றியது.

''அதனால் தான் தன்னை கை நீட்டி அறைய முனைந்தாளா?'' என்று அவனுக்கு அன்று ஒரு நாள் அந்த சம்பவத்துக்கான காரணமும் புரிந்தது.

''பிளாக் மெயில் எது எதுக்கு செய்ய வேண்டும் ?'' என்று ஒரு எல்லை இல்லாத சண்முகவேல் போன்ற பெற்றோர்களை நொந்து கொண்டான்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora