உயிர்-23

3.1K 150 52
                                    

சிவா வீட்டிற்குள் வந்ததும் ரவி பதட்டமானான்.எங்க டா போன என்றான் ரவி.

உன் குட்டி தங்கச்சி ய பாத்துட்டு வரேன் என்றான் சிவா.

என்னது அவள பாக்க போனியா.ஏதோ பக்கத்து branch வர போனும் னு ஆபிஸ் ல சொன்ன என்றான் ரவி அதிர்ச்சியாக.

உன் தங்கச்சி தான் restaurant க்கு கூப்டா அதனான் போனேன் என்றான் சிவா.

என்னது இது தப்பா இருக்கு.romanceஆ டா என்றான் ரவி.

ஆமா டா செல்லம் அவளும் அந்த ரவியும் என முழு கதையும் சொல்லி முடித்தான்.

ரவி சிவாவிடம் நா ஒரு தப்பு பண்ணிட்டேன் டா என்றான்.

என்ன பண்ண -சிவா.

நீ அவள் லவ் பண்றனு அவ கிட்ட சொல்லிட்டேன் என்றான் ரவி.

ஏய்.எதுக்கு சொன்ன லூசா நீ சிவாவிற்கு அவள் பேசியது இப்ப தெளிவாக புரிந்தது.

நீ அவள லவ் பண்ற னு அவள தவிர எல்லாருக்கும் தெரியும் அதான் என்றான் ரவி.

அவ தெரிஞ்சி இப்ப என்ன பண்ண போறா.அவ நா ஏதோ purpose ஆ அவளுக்கு help பண்றேன் அப்படி இப்படி பேசுறா. நா அவள எப்படி face பண்ண என சிவா புலம்பினான்.

நாம நாளைக்கு அவ கிட்ட பேசிக்கலாம் என்றான் ரவி.

அவ வருண லவ் பண்றா so இந்த விஷயத்த அப்படியே விட்டுறு என்றான் சிவா.

அவ வருண் அப்பா பத்தி எல்லாமே தெரியும் னு தான சொன்னா என்றான் ரவி.

ஆமா எனக்கு தூக்கம் வருது நா போறேன் என்று சிவா தூங்க போய்விட்டான்.

ரவி சிந்தனையில் ஆழ்ந்தான்.ஒருவேளை லாவண்யா பணத்துக்கு ஆசை பட்டு எம்எல்ஏ கூட சேர்ந்து தான் இத பண்றாலா என சந்தேகம் ஒருநிமிடம் அவனுள் தோன்றி மறைந்தது. அவ அப்படி பட்ட பொண்ணு கிடையாது. சிவா சொல்றது வச்சு பாத்தா வருண லாவண்யா நம்புறது சரி யா தப்பா இப்படியே அவனும் தூங்கிவிட்டான்.

அங்கு லாவண்யாவின் நிலைமை வேறு மாதிரி இருந்தது. ஏன் இப்படி பண்ண சிவா லைப்-லாங் எனக்கு நல்ல friend ஆ இருப்ப னு நினைசேன்.நீ என்கிட்ட யும் கனி கிட்டயும் நடந்துபிறதுல difference இருந்தவுடனே நா நீ அவள் லவ் பண்ற னு நினைச்சேன்.ஆனா நீ என்ன அந்த மாதிரி நினைக்கிற. நிஜமா சொல்றேன் வேற எந்த பொண்ணு னாலும் உன்ன கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டா.இந்த மாதிரி பையன் வேணும் னு நினைப்பா.பட் எனக்கு நீ ஒரு friend ஆ தான் வேணும் என சிவாவும் அவளும் சின்ன வயசுல எடுத்த போட்டோவ வச்சு பேசிட்டு இருந்தாள்.

அப்ப நீ எனக்காக செஞ்ச எல்லா விஷயத்துக்கு பின்னாடியும் லவ் தான் இருந்துச்சா.எனக்கு ஏன் first அ புரியல என நினைத்தவள் ஏன் ரவி அண்ணா பொய் சொல்லி இருக்க கூடாது என தோன்ற எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம் என முடிவு எடுத்தவள் சிவாவிற்கு நாளை காபி ஷாப்பில் பார்க்லாம் என message பண்ணி விட்டு தூங்கினாள்.

காபி ஷாப்
லாவண்யா வருவதுக்கு முன்னரே சிவாவும் ரவியும் வந்து இருந்தனர்.அவளுக்கும் காபி ஆர்டர் பண்ணி விட்டு காத்து இருந்தனர்.

லாவண்யா வந்தாள்.வந்ததும் சிவாவை முறைத்து விட்டு ரவியிடம் ஏன் அண்ணா நேத்து விளையாடு னிங்க .இந்த லூசு என்கிட்ட எவ்ளோ திட்டு வாங்கிச்சு தெரியுமா என்று சிரித்தப்படியே கேட்டாள் லாவண்யா.

அவன் சொன்னது நிஜம் தான் .எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் .என லைப் நீ எப்பவும் இருக்கனும் னு ஆசைப்பட்டேன் என்று அவன் சொல்லி முடிக்க அங்க இருந்த காபியை அவன் மேல் ஊத்தினாள் லாவண்யா.

உயிரின் உயிராய்Donde viven las historias. Descúbrelo ahora