ரவி (தனியாக) ஒவ்வொரு இடமாய் சென்று விசாரித்தான்.ஒரு தகவலும் பயன் உள்ளதாய் இல்லை.
மதியம் சிவா கால் செய்தான்.பஸ் ஏறிட்டேன் டா on the way .சீக்கிரம் வந்துருவேன் என்றான் சிவா.
மீட்டிங் முடிச்ச உடனே கிளம்பிட்டியா.கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா வரலாம் ல. 2 days ஆ இப்படி அலஞ்சிட்டே இருக்க என்றான் ரவி.
ரெஸ்ட் மெதுவா எடுக்கலாம்.இங்க லேனா ரொம்ப திட்டுனா .பெருசா என் தேவதை அது இது னு எங்க கிட்ட கொஞ்ச வேண்டியது இப்ப என்ன இவ்ளோ அசால்டா சொல்ற னு அதான் அவ lecture start பண்றதுக்குள்ள ஓடி வந்துட்டேன் என்றான் சிவா.
மவனே என்ன என்னா பாடு படுத்துன இப்ப உனக்கே lecture ஆ என மனதிற்குள் நினைத்தவன் அப்ப லேனாக்கு பயந்துட்டு இங்க வந்துட்ட அப்ப லாவண்யா உனக்கு முக்கியம் இல்ல ல என்றான் ரவி.
இங்க சிக்னல் கம்மியா இருக்கு அப்புரம் பேசறேன் என போனை வைத்தான் சிவா.
ரவி சிரித்து கொண்டே மீண்டும் தேடுதல் வேட்டையை துவங்கினான்.
சிவா வருவதற்கு மணி 8 ஆகி விட்டது.
ரவி கூறியதை வைத்து லாவண்யா சேலத்தில் இருக்க வாய்ப்பில்லை என முடிவு செய்தான்.சொல்லுடா மாம்பழம் மாதிரி அவளுக்கு வேற என்ன பிடிக்கும் அது எந்த ஊர்ல special னு சொல்லு அங்க போய் தேடலாம் என்றான் ரவி.