லாவண்யா கனியின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.என்ன விளையாடிறியா கொன்னுடுவேன் என்றாள்.
இப்ப எதுக்கு டி அடிச்ச.நா என்ன பண்ணேன்.லவ் பண்றது அவ்ளோ பெரிய தப்பா.நீ கூட தான் வருண லவ் பண்ண என்றாள் கனி.
அவளது பதிலில் உறைந்த லாவண்யா பின் தானே தொடர்ந்தாள் அவனுக்கு உன் மேல் லவ் இல்ல என்றாள் மொட்டையாக.
அப்புறம் யார லவ் பண்றான் உன்னையா சொல்லு உன்னையா லூசு என்றாள் கனி.லாவண்யா ஒன்றும் பேசவில்லை.
அவன் என்கிட்ட ஒரு தடவை லவ் சொல்லிட்டான்.நடுவுல நீ காணாம போய்ட்டல அப்ப ஒரு சண்டை அதனால தான் இப்ப ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்ங்குறான் சரியான லூசு என்றாள் கனி.
என்ன டி சொல்ர அதான் ரெண்டு பேரும் நல்லா தான பேசினிங்க அப்புறம் என்ன என்றபடி கனியை பார்க்க கனி இப்போது லாவண்யாவை அடித்து விட்டாள்.
என்ன அடிக்கிற நா பேர்த் டே பேபி என்றாள் லாவண்யா பாவமாக.
உடனே அவள் கண்ணத்தில் முத்தமிட்டவள்.
ரொம்ப பயந்திட்டியா பட்டுக்குட்டி. உன் சிவா உனக்கு தான்.நா உங்க அண்ணன் அதான் அந்த ரவிய தான் லவ் பண்றேன் என்றாள் சிரித்தபடி.
லாவண்யாவின் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள்.
சொல்லவே இல்ல பாத்தியா . நா ஓகே சொன்னா தான் எங்க அண்ணா ஓகே சொல்வான் என்றாள் லாவண்யா.
அதெல்லாம் எப்பவோ ஓகே சொல்லியாச்சே என அவளுக்கு பல்பு குடுத்தாள்.
ஆமா .நீ யார மா தங்கம் நினைச்ச என்று கேட்டாள் கனி.
நா எதுவும் நினைக்கலயே என்றாள் லாவண்யா.
அப்ப எதுக்கு மேடம்க்கு அவ்ளோ கோவம்.சிவா வ பிடிச்சிருக்கா என்றாள் அவளது பதிலை எதிர்பார்த்து.
அதற்குள் அந்த பக்கம் வந்த ரவியை பார்த்து, அண்ணா இங்க வா என்றாள்
லாவண்யா.அவன் அங்கு இருந்தபடி என்ன என கேட்க அண்ணி கூப்டாங்க என கத்தியபடி ஓடிவிட்டாள்.