1 லண்டனில் மலரவன்

7K 88 12
                                    

1 லண்டனில் மலரவன்

தங்கள் *எம்எம்* ஃபேஷன்  நிறுவனத்தின் விரிவாக்க பணியின் பொருட்டு, கடந்த ஒரு வருடமாய் லண்டனில் வசித்து வருகிறான் மலரவன்.

இருபத்தி எட்டு வயதே நிரம்பிய மலரவன், மணிமாறன், மின்னல்கொடி தம்பதியினரின் மூத்த மகனாவான். அவனுக்கு இருபத்தி எட்டு வயது ஆகிவிட்டாலும் அவனை திருமணம் செய்து கொள் என்று அவன் பெற்றோர் கட்டாயப்படுத்தவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு தெரியும் அது நேர விரயம் என்று.

ஒரு தீ விபத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த தனது நிறுவனத்தை திடப்படுத்தும் பணியில், முழு நேரத்தையும் மலரவன் செலவிட்டு கொண்டிருக்கிறான். எம்எம் நிறுவனம் கொள்முதல் செய்து வைத்திருந்த அனைத்து பொருளும் தீயில் எரிந்து சாம்பலானது. ஒரே இரவில் அனைத்தும் தலைகீழாய் மாறி, எம்எம் நிறுவனம் சந்திக்கு வந்தது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துவிட்டு அப்போது தான் தாயகம் திரும்பியிருந்த மலரவன், தன் நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் பொறுப்பை தன் தோளில் வாங்கிக் கொண்டான். அவனுடைய முழு நேர உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், அவர்களை விட்டு பிரிந்து சென்ற விநியோகஸ்தர்களும், பங்குதாரர்களும் மீண்டும் அவர்களது நிறுவனத்தை தேடி வந்தார்கள்.

வியாபார உலகில், இது அவனுடைய வெற்றிகரமான ஐந்தாவது வருடம். தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை, இந்தியாவோடு நிறுத்திக் கொள்ளாமல், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான் மலரவன். தன் வெற்றிப் பயணத்தில், தன்னுடன் பயணித்த தன் நண்பன் மித்திரனை, தன் தந்தைக்கு உறுதுணையாக இந்தியாவில் விட்டு விட்டு, லண்டனில் தன் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறான் மலரவன்.

அவன் இந்தியாவிற்கு திரும்பி வர நாட்டமின்றி இருந்ததால், மணிமாறனும், மின்னல் கொடியும் வெறுத்துப் போனார்கள். தங்கள் நிறுவனத்தின் கிளையின் துவக்க பணிக்காக தான் அவன் லண்டனுக்கு சென்றான். சிறிது நாட்களில் அவன் இந்தியாவுக்கு திரும்பி விடுவான் என்று அவனது பெற்றோர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அவன் இன்னும் அங்கு தான் இருந்து கொண்டிருக்கிறான்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now