10 மலரவனின் ஒப்புதல்

1.7K 77 9
                                    

9 மலரவனின் ஒப்புதல்

அழுது கொண்டிருந்த மின்னல்கொடியை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார் மணிமாறன். அப்பொழுது அவர்களின் அறைக்குள் நுழைந்தான் மலரவன். தன் சேலை முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்ட மின்னல்கொடி, அவனைப் பார்க்க திராணியில்லாமல் தலை தாழ்த்திக் கொண்டார்.

"எப்படி இருக்கீங்க மா?" அவரது கரத்தை பற்றினான்.

ஒன்றும் கூறாமல் அவன் முகத்தை ஏறிட்டார் மின்னல்கொடி. அவர் எதுவும் கூறத் தேவையில்லை. அவரது தோய்ந்த முகமே கூறியது அவர் இப்பொழுது என்ன நிலையில் இருக்கிறார் என்று. அவரது தோள்களை மலரவன் ஆதரவாய் சுற்றி வளைத்துக் கொண்டது தான் தாமதம், அவனது தோளில் சாய்ந்து, வெடித்து அழுதார் மின்னல்கொடி.

"கடைசி தடவை நான் சிவகாமியை பார்த்தப்போ, என்கிட்ட அவ எவ்வளவு நம்பிக்கையோட பேசினா தெரியுமா? ஏற்கனவே நம்பிக்கை இழந்து நிக்குற அவளுடைய நம்பிக்கையை மறுபடியும் நான் எப்படி உடைப்பேன்?"

" நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் மா"

பெருமூச்சு விட்டார் மின்னல்கொடி.
அவருக்கு தெரியும், அவன் என்ன கூறப்போகிறான் என்று. அவன் லண்டனுக்கு திரும்பிச் செல்ல முடிவு செய்திருப்பான். அவனுக்குத் தான் இப்பொழுது இந்தியாவில் எந்த வேலையும் இல்லையே...! மகிழன் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறி விட்டான். அதன் பிறகு அவனுக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது? லண்டனுக்கு திரும்பிச் சென்று, தான் விட்டு வந்த வேலைகளை தொடர முடிவு செய்து இருப்பான்.

"நீ லண்டனுக்கு திரும்பி போயிடலாம்னு முடிவு செஞ்சிட்டியா? இன்னும் கொஞ்ச நாள் எங்க கூட இருக்கக் கூடாதா? நீ தானே எங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல்? நீ இருந்தா எங்களுக்கு கொஞ்சம் தெம்பா இருக்குமே..." என்று கெஞ்சாத குறையாய் கூறினார் மின்னல்கொடி.

"நான் லண்டனுக்கு திரும்பி போறதை பத்தி பேசல மா" என்றவுடன் மின்னல்கொடியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now