35 உடைந்த உண்மை

1.8K 84 8
                                    

35 உடைந்த உண்மை

குமரேசன் ராகேஷுக்கு கொடுத்த இருபத்தைந்து லட்சத்தை பற்றி மணிமாறனிடம் கூறினான் மலரவன்.

"இது உண்மையா இருக்க முடியாது மலரா. எதுக்காக குமரேசன் ராகேஷுக்கு இருபத்தஞ்சு லட்சம் கொடுக்கணும்?"

"அதையே தான் பா நானும் கேட்கிறேன்.  எதுக்காக அவ்வளவு பணத்தை அவர் ராகேஷுக்கு கொடுக்கணும்? அவங்களுக்கு நடுவுல அப்படி என்னப்பா உறவு இருக்கு? அவருக்கு ராகேஷ் யாரு? எந்த அஸ்ஸுரன்சும் இல்லாம எதுக்காக அவர் அவனுக்கு பணம் கொடுத்தாரு?"

மலரவன் எந்த புள்ளிகளை இணைக்க முயல்கிறான் என்று புரியாத மணிமாறன் ஒன்றும் கூறாமல் நின்றார். அது புரிந்த போது, அவர் திடுக்கிட்டார்.

"குமரேசனுக்கு ராகேஷ் ஏதாவது ஒரு விதத்தில உதவி இருப்பான்னு நினைக்கிறியா?" என்றார் பதற்றத்துடன்.

"அப்படி இல்லன்னா எதுக்காக அவர் அவனுக்கு அவ்வளவு பணம் கொடுக்கணும்? உங்க ஃபிரண்டை பத்தி உங்களுக்கு தெரியாதா? மத்தவங்களுக்கு பணம் கொடுத்து உதவுற அளவுக்கு அவரு அவ்வளவு தயாள குணம் படைச்சவரா?" என்றான் மலரவன்.

மணிமாறனின் மனதில் நடுக்கம் தோன்றியது. அவருக்கு குமரேசனை பற்றி நன்றாகவே தெரியும். அவர் யாருக்கும் காலணா பணம் கொடுக்காதவர். அப்படி இருக்கும் போது இப்பொழுது மட்டும் அவர் ஏன் ராகேஷுக்கு பணம் கொடுத்தார்?

"நான் உங்ககிட்ட அப்பவே சொன்னேன்... மகிழனை நம்புங்கன்னு கெஞ்சினேன். ஆனா, நான் சொன்னதை நீங்க காது கொடுத்து கேட்கவே இல்ல. உங்க பிள்ளையை விட, உங்களுடைய ஃபிரண்டை தான் நீங்க நம்புனிங்க. இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு... மகிழன் அவனுடைய வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிறான். அவனுக்கு, இதயம் இல்லாத, நம்மளை அழிக்கணும்னு நினைக்கிற ஒருத்தி பொண்டாட்டியா கிடைச்சிருக்கா" என்றார் கண்ணீர் ததும்ப மின்னல்கொடி.

"எதை வச்சி நீ கீர்த்தியை  அப்படி சொல்ற?" என்றார் மணிமாறன்.

"பின்ன என்ன? எதுக்காக செய்யாத தப்பை செஞ்சதா மகிழன் மேல குற்றம் சுமத்தி அவனை கல்யாணம் பண்ணிக்கணும்? முதல்ல அவ நம்ம  மலரவனை கல்யாணம் பண்ணிக்கனும்னு பிடிவாதமா இருந்தா. ஆனா இப்போ, அவ நம்ம மகிழனோட பொண்டாட்டி. எதுக்காக அவங்க இதை செய்யணும்?"

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ