34 மகிழனின் நடிப்பு
தள்ளாடியபடி தன் அறைக்கு சென்றான் மகிழன். அவன் வருவதற்கு முன், தன் அறைக்கு ஓடி சென்றாள் கீர்த்தி. உள்ளே வந்த மகிழன், கதவை சாத்தி தாளிட்டுவிட்டு, *இங்கே வா* என்பது போல் அவளை நோக்கி கையசைத்தான். அவனிடம் செல்லாமல் தயங்கி நின்றாள் கீர்த்தி. தன் கையில் இருந்த மது பாட்டிலை தலையின் மீது வைத்துக் கொண்டு நடனமாட துவங்கினான் மகிழன்.
"ஏய்... வா இங்க..." என்றான் ஆடியபடி.
"நீங்க குடிச்சிருக்கீங்களா?"
"எனக்கு குடிப்பழக்கம் இருக்கிற விஷயமே உனக்கு தெரியாத மாதிரி கேள்வி கேட்கிற?" என்றான் நக்கலாக.
பேச்சிழந்து நின்றாள் கீர்த்தி.
"எனக்கு குடிக்கிற பழக்கம் இருக்குன்னு உனக்கு நல்லாவே தெரியும்... குடிச்சா நான் பொம்பளைங்க கிட்ட தப்பா நடந்துக்குவேன்னும் உனக்கு தெரியும்" என்று வில்லன் சிரிப்பு சிரித்தான்.
பயத்திற்குள்ளான கீர்த்தி இங்கும் அங்கும் நோட்டமிட்டாள்.
"உனக்கு தெரியாத இன்னொரு விஷயம் இருக்கு. நான் குடிச்சா, எனக்கு எதிர்ல இருக்கிறவங்களை அடி பின்னிடுவேன், தெரியுமா?" என்றான்.
அதைக் கேட்ட கீர்த்தி அதிர்ச்சி அடைந்தாள். இப்போது அவன் அவளை அடிக்கப் போகிறானா? அவன் மீது தன் கண்களை பொருத்தியபடி, அங்கிருந்து மெல்ல கதவை நோக்கி நகரத் துவங்கினாள், அந்த அறையை விட்டு வெளியேறும் நோக்குடன். அவளது நோக்கத்தை புரிந்து கொண்ட மகிழன், அவள் கதவை சென்று அடையும் முன், அவளை அடைந்து, அவள் கூந்தலை பற்றினான்.
"என் முடியை விடுங்க" என்று அரற்றினாள்.
"நான் உன்னை என்ன செய்யப் போறேன்னு நினைக்கிற?"
"முடியை விடுங்க... வலிக்குது"
"இப்படி தான் எனக்கும் வலிச்சது... எங்க அம்மா அப்பா கண்ணுல என்னை பொம்பளை பொறுக்கியா காட்டின போது..."
"நீங்க ஒரு குடிகாரன்... அப்படின்னா உங்க அப்பா அம்மா உங்களை பத்தி வேற எப்படி நினைப்பாங்க?" கத்தினாள் அவள்.
YOU ARE READING
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...