6 பழையவள் என்றாலும் புதியவள்

2.1K 82 10
                                    

6 பழையவள் என்றாலும் புதியவள்

இரவு உணவை சாப்பிடவில்லை மலரவன். அவனுக்கு எதுவும் சரியாக படவில்லை. அதனால் மின்னல் கொடி அனுப்பியிருந்த உணவை அவன் தொடவே இல்லை.

ஏன் மகிழன் இப்படி இருக்கிறான்? அவன் இவ்வளவு பொறுப்பில்லாதவனா? அவனுக்கு தன் பொறுப்பு புரியவில்லை என்றால், அவனுக்கு அதை உணர்த்த வேண்டியது தன் பொறுப்பு என்று உணர்ந்தான் மலரவன். அவனிடம் அதைப் பற்றி பேசுவது என்றும் தீர்மானித்தான். ஒரு பெண்ணுக்கு தன் நல்லுறவில் நம்பிக்கை அளித்த பின், எவ்வாறு அந்த நம்பிக்கையை உடைக்க முடியும்? பூங்குழியை முதலில் திரும்பியது மகிழன் தான். அவன் தான் அவனது பெற்றோரிடம் கூறி, அவனுக்காக பூங்குழியை பெண் கேட்கச் சொன்னது. மணிமாறனும் மின்னல்கொடியும் மட்டுமல்ல, தில்லைராஜனும் சிவகாமியும் கூட ஆனந்தத்தில் திளைத்தார்கள். எல்லோரை விடவும் பேரானந்தம் அடைந்தது மணிமாறன் தான். ஏனென்றால் அவருக்குத் தெரியும், பூங்குழலியின் ரூபத்தில் தங்களுக்கு கிடைக்கப் போவது மருமகள் அல்ல, ஒரு மகள் என்று. அவர்களுக்கு ஏற்கனவே பூங்குழலியை மிகவும் பிடிக்கும். பூங்குழலியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மகிழன் கூறியவுடனேயே அவர்கள் அதற்கு சம்மதித்தார்கள்.  அவள் படிப்பை முடித்தவுடன் திருமணம் என்று நிச்சயத்துக் கொண்டார்கள். அவள் படிப்பை முடித்த பின், அவர்களது திருமணத்தை முடிக்க, மணிமாறனும் மின்னல்கொடியும் மலரவனை இந்தியா வர சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவனுக்கு அதற்கு நேரமே அமையவில்லை. லண்டனில் இருந்த அவர்களது நிறுவனத்தின் கிளை, அவனை மொத்தமாய் எடுத்துக் கொண்டு விட்டது.

பூங்குழலிக்கு ஏற்றப்பட்ட சலைன், முடியும் நிலையில் இருந்தது. அங்கு வந்த ஒரு செவிலி, அவளுக்கு ஊசி போட்டு விட்டு சென்றார். ஊசி போடும் போது, மயக்க நிலையிலையே முகம் சுளித்தாள் பூங்குழலி. அதை பார்த்த மலரவனுக்கு, அவள் சீக்கிரம் சுய நினைவிற்கு வந்து விடுவாள் என்ற நம்பிக்கை வந்தது.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin