53 திட்டத்தின் ஒரு பகுதி
மணிமாறனுடான அழைப்பை துண்டித்த மலரவன், ஸ்டீவுக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்ற ஸ்டீவ்,
"ஹலோ மலழ், நான் மணிமாறன் சாரை ஹோட்டல்ல செட்டில் பண்ணிட்டேன்" என்றான்.
" நான் சொல்றதை கவனமா கேளு, ஸ்டீவ்"
"சொல்லுங்க"
"அப்பா லண்டன்ல இருக்கிற வரைக்கும், அவரை பாதுகாக்க எனக்கு சில பேர் வேணும். அது அப்பாவுக்கு தெரியக்கூடாது"
"சரி"
"அது மட்டுமில்ல, இப்போ அவர் கூட இருக்கிறானே, அவனையும் கண்காணிக்கணும்"
"வில்லியமையா சொல்றீங்க?"
"ஆமாம். உனக்கு அவனை தெரியுமா?"
"தெரியாது. மணி சார் தான் அவரை கிரீட் பண்ணாரு"
"சரி. அவனை ஃபாலோ பண்ண சில பேரை அப்பாயிண்ட் பண்ணு. அவன் நம்ம கண்காணிப்பிலேயே இருக்கணும்"
"சரி"
"அதை பத்தி எனக்கு அப்பப்போ அப்டேட் பண்ணிக்கிட்டே இரு"
"ஷூயூர்"
அழைப்பை துண்டித்தான் மலரவன்.
ரஞ்சித் இல்லம்
குமரேசனின் உதவியாளர் ரஞ்சித்தின் மனைவி காவேரி, நிம்மதி இழந்து இங்கும் அங்கும் உலவி கொண்டிருந்தார். அப்பொழுது சோர்வே வடிவாய் உள்ளே நுழைந்தார் ரஞ்சித். அவர் சோர்வாய் இருந்ததற்கு காரணம், கைலாசம் கைது செய்யப்பட்ட செய்தி தான். அந்த செய்தி அவரின் மனதில் மிகப்பெரிய பயத்தை உண்டாக்கியிருந்தது. கைலாசத்தையும் வங்கியாளரையும் அவ்வளவு சுலபமாய் மலரவனாய் பிடித்து விட முடிந்தது என்றால், குமரேசனை அவன் என்ன செய்வான்? கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் குமரேசனின் கதையை முடித்து விடுவானே...! எதற்க்குத்தான் தேவை இல்லாமல் குமரேசன் சிங்கத்தின் வாயில் தலையை வைக்கிறாரோ...! தன் மாமனாருடன் விளையாடிய ஒருவனையே இப்படி வலைவீசி மலரவன் பிடிக்கிறான் என்றால், தன் குடும்பத்தையே வேரறுக்க நினைக்கும் குமரேசனை சும்மா விட்டு விடுவானா? அவருக்கு பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
YOU ARE READING
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...