36 உணர்வுகள்
"நான் இந்தியா வர விரும்பாததுக்கு காரணம், நீ என் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிறதை பார்க்கிற தைரியம் எனக்கு இருக்கல. ஏன்னா நான் உன்னை காதலிச்சேன்." தன் வாழ்வின் மிகப்பெரிய உண்மையை போட்டு உடைத்தான் மலரவன்.
நம்ப முடியாத பார்வையுடன், அவனை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி. இப்போது அவன் என்ன கூறினான்? அவன் கூறியது உண்மையா? அவன் அவளை காதலித்தானா? ஆரம்பத்தில் இருந்தா? தன் தொண்டையை அடைத்த ஏதோ ஒன்றை விழுங்க முடியாமல் திணறினாள் பூங்குழலி.
"நீங்க என்னை காதலிச்சீங்களா என்றாள்?" நம்ப முடியாமல்.
அமைதியாய் இருந்தான் மலரவன்.
"நான் உங்ககிட்ட என்னமோ கேட்டேன் மலர். சொல்லுங்க..."
"இப்போ தான் சொன்னேன்..."
"முழுசா சொல்லல"
பெருமூச்சு விட்டான் மலரவன்.
"நான் உண்மையை தெரிஞ்சிக்குறது அவசியம்னு உங்களுக்கு தோணலையா?"
"உனக்கு இப்போ என்ன தெரியணும்?"
"நீங்க என்னை ஆரம்பத்தில் இருந்தே காதலிச்சீங்களா?"
ஆம் என்று தலையசைத்தான்.
"எங்க அம்மா அப்பாவோட வெட்டிங் ஆனிவர்சரி ஃபங்ஷன்ல உன்னை பார்த்த போதே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிடுச்சு. நான் ஒருத்தர் கிட்ட இன்ட்ரஸ்டா பேசினது அது தான் முதல் தடவை. உன்னை ஏன் எனக்கு பிடிச்சதுன்னு சத்தியமா எனக்கு தெரியல. ஆரம்பத்துல நான் கூட அது ஒரு டைமிங் அட்ராக்ஷன்னு தான் நினைச்சேன். ஆனா, நான் சதா உன்னை பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட ஃபீலிங்ஸ் மேல எனக்கே சந்தேகம் வந்தது. லண்டனுக்கு போறதுக்கு முன்னாடி உன்னை ஒரு தடவையாவது பார்த்துடணும்னு மனசு அடிச்சுகிச்சு. அப்போ தான் சிக்கவே கூடாதுன்னு நினைச்ச ஒரு விஷயத்துல நான் மாட்டிக்கிட்டது புரிஞ்சது. என்னால எதுவும் செய்ய முடியல"
"அப்படின்னா ஏன் நீங்க என்னை மீட் பண்ணல?"
"உன்னை நான் மீட் பண்ணல. ஆனா, தூரத்தில் இருந்து பார்த்தேன்"
![](https://img.wattpad.com/cover/341557334-288-k764393.jpg)
VOCÊ ESTÁ LENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...