22 அளவு

2.2K 87 9
                                        

22 அளவு

"நான் உன்னை காதலிக்கிறேன்னா, உன்னை காதலிக்கிறேன்னு தான் அர்த்தம்"

"எப்போதிலிருந்து?" என்ற எதிர்பாராத கேள்வி எழுந்தது பூங்குழியிடமிருந்து

" உன்னை எப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேனோ அப்போதிலிருந்து"

"நாப்பதிஎட்டு நாளுக்கு முன்னாடி இருந்தா?"

புன்னகைத்தான் மலரவன்.

"உனக்கு இருந்த படபடப்பு போயிடுச்சு போல இருக்கு" என்று லேசாய் அவளது மூக்கை தட்டி அவளை திசை திருப்பினான்.

அவனுக்கு பதில் கூறாமல் தன் பார்வையை வேறு எங்கோ திருப்பினாள் பூங்குழலி.

"நான் கிளம்புறேன். இப்போதிலிருந்து நம்ம கல்யாண வேலையில் நான் ரொம்ப பிசியா இருப்பேன். அதனால நம்ம கல்யாணம் வரைக்கும், நம்மளோட லண்டன் ப்ரோக்ராமை தள்ளி வைக்கலாம்னு இருக்கேன். நீயும் பிரேக் எடுத்துக்கோ. உனக்கு ஏதாவது தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சுன்னா, எனக்கு தாராளமா கால் பண்ணு" கூறியபடி வாசலை நோக்கி நடந்தான்.

ஒன்றும் கூறாமல் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி.  அப்படி என்றால் அவன் இதற்குப் பிறகு இங்கு வரப்போவதில்லலையா? அவளை நோக்கி திரும்பிய மலரவன்,

"நம்ம கல்யாண விஷயமா நான் இங்க வருவேன்" என்றான் அவள் மனதை படித்து விட்டவன் போல.

சரி என்று மெல்ல தலையசைத்தாள் தன் முகத்தில் எந்த ஆச்சரிய குறியையும் காட்டிக் கொள்ளாமல். மலரவன் அங்கிருந்து சென்ற பின், பெருமூச்சுடன் அமர்ந்தாள் பூங்குழலி.

அவன் எதற்காக அங்கு வந்தான்? அந்த மந்திர வார்த்தைகளை அவளிடம் நேரில் கூற வந்தானோ? அவன் சாதாரணமாய் இருப்பதாய் தோன்றவில்லை. அவனிடம் தீவிரம் தெரிகிறது. அவனது நடவடிக்கை, அவன் கொண்டுள்ள காதல் சாதாரணமானது என்று கூறுவதாய் தெரியவில்லையே.  இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி ஒருவன் இவ்வளவு தீவிரமாய் மாற முடியும்? இவன் ஒரு புதிர். திருமணத்திற்கு பிறகு, அவள் அவனிடம் படாத பாடு பட போவது உறுதி.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)حيث تعيش القصص. اكتشف الآن