30 அமைதியான மனைவி

1.6K 82 10
                                    

30 அமைதியான மனைவி

ராகேஷை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் மகிழன். அவன் போதை மருந்து பழக்கம் உடையவன் என்பதை மகிழனால் நம்ப முடியவில்லை. அப்படி ஒரு பழக்கம் அவனுக்கு இருந்திருந்தால், அது எப்படி தனக்கு தெரியாமல் போனது? அதோடு மட்டுமல்லாமல் அவனுக்கு இருபத்தைந்து லட்சம் எங்கிருந்து கிடைத்தது? அவனுக்கு சொந்த வீடு கூட கிடையாதே... வாடகை வீட்டில் தானே வசித்துக் கொண்டிருக்கிறான், அதுவும் நடுத்தர மக்கள் வசிக்கும் மிக சாதாரணமான பகுதியில்...! அப்படி இருக்கும் பொழுது, அவனுக்கு அந்த பணத்தை கொடுத்தது யார்? தன்னைத் தவிர, இருபத்தைந்து லட்சம் கொடுத்து உதவக்கூடிய அளவிற்கு அவனுக்கு வசதியான நண்பர்கள் கூட யாரும் கிடையாதே! தனக்கு தெரியாமல் அவனுக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருக்க கூடுமோ? அது பற்றி இவ்வளவு நாள் தனக்கு தெரியாமல் போனதே...!  அவன் காவல்துறையினரிடம் என்ன கூறுகிறான் என்று பார்க்கலாம், என்று எண்ணினான் மகிழன்.

மறுபுறம், ராகேஷின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட இருபத்தைந்து லட்சம் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று துருவி துருவி அவனை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள் காவல்துறையினர். ராகேஷுக்கு ஒரு விஷயம் புரிந்து போனது, தன்னுடைய உதவிக்காக யாரும் வரப் போவதில்லை. மகிழனுடன் இருந்த நட்பை அவன் எடுத்துக் கொண்டு விட்டான். அவன் மகிழனை பற்றி என்ன கூறினான் என்பது மகிழுனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மலரவனுக்கு அனைத்தும் தெரியுமே. அவன் நிச்சயம் மகிழனை இந்த விஷயத்தில் தலையிட விட மாட்டான். ஏனென்றால், இது போதை மருந்து தடுப்பு பிரிவின் கீழ் உள்ள  வழக்கு. ஒருவேளை மகிழன் அவனுக்கு உதவ முன்வந்தால் கூட, இந்த இருபத்தைந்து லட்சம் அவனுக்கு எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்புவான். அவனுக்கு ராகேஷ் என்ன பதில் கூற முடியும்? ராகேஷின் நண்பர்கள் யார் என்று மகிழனுக்கு நன்றாகவே தெரியும் அவனிடம் ராகேஷால்  பொய் கூற முடியாது. பொய் கூறினாலும் நிச்சயம் மகிழன் கண்டுபிடித்து விடுவான். இந்த விஷயத்தில் இருந்து ராகேஷ் எப்படி வெளிவரப் போகிறான்? அந்த இருபத்தைந்து லட்சம் தனக்கு எப்படி கிடைத்தது என்று கூறாத வரை, அவன் இந்த வழக்கில் இருந்து வெளிவர முடியாது. குமரேசனின் பெயரை கூறி விடுவது தான் அவனுக்கு உத்தமம். குமரேசனால் மட்டும் தான் அவனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியும். ஒருவேளை அவர் விடுவிக்க தவறினால், அவரைப் பற்றிய உண்மையை மகிழனிடம் கூறி விடுவது என்று முடிவு செய்தான் ராகேஷ்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now