51 மருமகன்

1.4K 78 11
                                    

51 மருமகன்

"நான் மலரவன்... தில்லைராஜனோட மருமகன்" என்றான் மலரவன் கைலாசத்தின் மீது கோபப்பார்வை வீசியபடி.

அதைக் கேட்ட கைலாசம் திகில் அடைந்தான். மலரவன் யார் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் தில்லைராஜனுடைய நெருங்கிய நண்பனான மணிமாறனின் மூத்த மகன். அவன் எப்படி தில்லைராஜனின் மருமகன் ஆனான்? அவன் லண்டனில் தானே இருந்தான்? மணிமாறனின் இளைய மகனான மகிழனை தானே பூங்குழலி மணப்பதாய் இருந்தது? மகிழனை மணக்காமல் பூங்குழலி ஏன் மலரவனை மணந்து கொண்டாள்? என்ன காரணத்திற்காக அவனை மணந்து கொள்ள பூங்குழலி சம்மதித்தாள்? கைலாசத்திற்கு தெரியும், மணிமாறனோ, மகிழனோ, அவனை தேடி பிடிக்கும் அளவிற்கு திறமையானவர்கள் அல்ல. தில்லைராஜனுடன் ஆட்டத்தை துவங்கும் முன்பே, அவர்களது பலம் பலவீனத்தை பற்றி கைலாசம் தெளிவாக விசாரித்து தெரிந்து கொண்டிருந்தான். அவன் தெரிந்து கொண்ட விவரம், மணிமாறனும், மகிழனும் தில்லைராஜனின் சொத்தை அபகரிப்பதில் கைலாசத்திற்கு பெரிய தடையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியது. மணிமாறனின் மூத்த மகன் தான் அதை செய்வதற்குரிய எல்லா திறமையும் வாய்ந்தவன், ஆனால் அவன் தில்லைராஜனுக்கு எந்த விதத்திலும் உறவு கிடையாது, அவன் லண்டனில் வசித்து வருகிறான், அவனுக்கு இருக்கும் நேர நெருக்கடியின் காரணமாக, அவன் இந்தியா வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றல்லவா அவன் கேள்விப்பட்டிருந்தான்? அப்படி இருக்கும் போது, அவன் எப்படி இந்தியா வந்தான்? எப்படி பூங்குழலியை திருமணம் செய்து கொண்டான்?

"என்ன பாக்குற? உன்னோட திருட்டுத்தனத்தை யாராலயும் கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியா?" என்றான் மலரவன்.

"என்ன பேசுற நீ? ஜப்தி பண்ண சொத்தை, ஏலம் விடாம விக்கிறது பேங்க் செஞ்ச தப்பு. அதுல என்னோட தப்பு என்ன இருக்கு?" என்று திணறினான் கைலாசம்.

"அதுல உன்னோட தப்பு என்ன இருக்குன்னு நான் சொல்லனுமா, இல்ல நிரூபிக்கணுமா?" என்றான் மலரவன்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now