26 முதல் நாள்
திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராய் கலைந்து செல்ல தொடங்கினார்கள். அங்கு நிலைமை சரியில்லாததால், யாரும் அங்கு இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை மணிமாறன் குடும்பத்தினர்.
சிவகாமியும் வடிவுக்கரசியும் கூட கிளம்ப தயாரானார்கள். செல்வதற்கு முன் ஒரு முறை பூங்குழலியை பார்க்க விரும்பினார்கள். அவள் இருந்த அறைக்கு அவர்கள் வந்தவுடன், அவர்களை நோக்கி விரைந்த பூங்குழலி,
"அம்மா, இங்க என்ன நடக்குது? எதுக்காக எந்த முன்னறிவிப்பும் இல்லாம திடீர்னு மகிழன், கீர்த்தி கல்யாணம் நடந்தது?" என்றாள் ரகசியமாய்.
"உன் கல்யாணதன்னைக்கு இதையெல்லாம் சொல்லி, தேவையில்லாம உன்னை டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான் நான் எதையும் சொல்லல"
"டென்ஷனா? டென்ஷன் ஆகிற அளவுக்கு என்னமா நடந்தது?"
"கீர்த்தி கெஸ்ட் ரூம்ல தனியா இருந்தப்போ, மகிழன் அவ கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணானாம். அந்த பொண்ணோட அம்மா அப்பா அதை பெரிய பிரச்சனை பண்ணிட்டாங்க. வேற வழி இல்லாம, மணி அண்ணனும் மின்னலும் அந்த பொண்ணை மகிழனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிச்சிட்டாங்க. பாவம் அவங்க" என்றார் கவலையாக.
"வேற வழி இல்லாம, அப்படினா என்ன அர்த்தம்?"
"கீர்த்தியோட அப்பா தான் அப்படி செய்ய சொல்லி கேட்டிருக்காரு"
"அதுக்கு கீர்த்தி சம்மதிச்சிட்டாளா?"
"அவ வேற என்ன செய்வா?"
முகத்தை சுருக்கினாள் பூங்குழலி. அவளுக்கு கீர்த்தியை பற்றி நன்றாகவே தெரியும். தன்னிடம் ஒருவன் தவறாய் நடந்து கொள்ள முயற்சித்தான் என்பதற்காக அவனையே திருமணம் செய்து கொள்ள கூடிய பெண் அல்ல அவள். எல்லாவற்றிற்கும் மேலாக, மகிழன் அவளிடம் தவறாக நடந்து கொண்டான் என்பதையும் அவளால் நம்ப முடியவில்லை... அதுவும் அவனது அண்ணனின் திருமணத்தில்...! அவளுக்கு ஏதோ தவறாய் தெரிந்தது. ஆனாலும் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை தன் அம்மாவிடமும் அத்தையிடமும் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை.
ESTÁS LEYENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...
