52 தலைக்கு வந்தது

1.6K 82 12
                                    

52 தலைக்கு வந்தது...

ஏகமாய் உணர்ச்சி வசப்பட்டிருந்த பூங்குழலியை தூக்கி அணைத்துக் கொண்டான் மலரவன். தன் இதழ்களை அவன் இதழ்களோடு மோதினாள் பூங்குழலி. அது அவள் உணர்ச்சிவசப்பட்டு இருந்ததன் விளைவு. அது மலரவனுக்கும் தெரியும். அவளை தன்னை முத்தமிட விட்டு அமைதியாய் நின்றான் மலரவன். அந்த முத்தத்தை முடித்துக் கொண்டு அவன் நெற்றியில் ஆழமாய் இதழ் பதித்த அவள்,

"தேங்க்யூ சோ மச் மலர்" என்று இறுக்கமாய் அவனை அணைத்துக் கொண்டாள்.

அவன் அவளை கீழே இறக்கி விட எண்ண,

"என்னை கீழே விடாதீங்க" என்றாள்.

அவன் மீண்டும் அவளை இறுக்கிக் கொண்டு,

"எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்றது அவசியமா?" என்றான்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"நான் உன் புருஷன் ஞாபகம் இருக்கா?"

"என்னால அதை மறந்துட முடியும்னு நெனைக்கிறீங்களா?" என்று பதில் கேள்வி கேட்டாள், பதில் கூறாமல்.

"உன் புருஷனுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு என்ன அவசியம்?"

"அப்போ நான் வேற என்ன சொல்றது?"

"நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு நல்லாவே தெரியும்"

"நான் என்ன நினைக்கிறேன்?"

"நீ எப்பவும் உன் புருஷனை பத்தி தான் நினைச்சுகிட்டு இருப்ப"

"அப்படியா?"

"ஆமாம்"

"நீங்க சொல்றது சரி தான்"

"உன் புருஷன் என்ன நினைக்கிறான்னு உனக்கு தெரியுமா?"

"அவர் எப்பவும் என் சந்தோஷத்தை பத்தி தான் நினைச்சுகிட்டு இருப்பார்"

"அதைத் தான் அவன் செய்றான்"

"என்னை கீழே இறக்கி விடுங்க"

மாட்டேன் என்று தலையசைத்தான்.

"ப்ளீஸ் விடுங்க"

அவன் அவளைக் கீழே இறக்கி விட,

"என்னோட அப்பாவை மறுபடியும் உயிரோட கொண்டு வர முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா நம்மால அவருடைய ஆன்மாவை சாந்தி அடைக்க வைக்க முடியும். அது கைலாசத்துக்கு பனிஷ்மென்ட் கிடைச்சா மட்டும் தான் நடக்கும். நான் அப்படி நடக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதை நீங்க செஞ்சிட்டிங்க" என்று மீண்டும் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now