45 பெருமை
உள்ளேயும் வெளியேயும் கொதித்துக் கொண்டிருந்தான் மகிழன். எவ்வளவு தைரியம் இருந்திருந்தால் கீர்த்தி அவன் அம்மாவிடம் இப்படி விளையாடியிருப்பாள்? அவள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் அவனை மணந்து கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும். அவர்களை அவள் நிம்மதியாக இருக்க விடமாட்டாள். அவர்கள் சந்தோஷமாக இருந்தால் அவளுக்கு பொறுக்காது. அவள் செய்த செயலுக்கான தண்டனையை அவள் அனுபவித்தே தீர வேண்டும்... அவள் ரத்தக்கண்ணீர் வடித்தே தீர வேண்டும். தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள, அவனை அவள் ஒரு *ரிமோட்டாக* பயன்படுத்தலாம் என்று நினைத்தாள் அல்லவா? அப்படியே இருக்கட்டும். அவள் நினைத்தபடி அவன் ரிமோட் ஆகவே செயல்படுவான்... ஆனால் அவள் எண்ணிய விதத்தில் அல்ல. உட்கார்ந்த இடத்திலிருந்து அவளை வேலை செய்ய வைக்கும் விதத்தில்.
மின்னல்கொடியின் அறைக்கு வந்தான் மகிழன். எவ்வளவு தான் அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும், கீர்த்தியை பார்த்தவுடன் அவனுக்கு ரத்தம் கொதித்தது.
"எனக்கு வயிறு கலக்குற மாதிரி இருக்கு. நான் கொஞ்சம் பாத்ரூமுக்கு போகணும்" என்றார் மின்னல்கொடி.
"நான் உங்களை கூட்டிக்கிட்டு போறேன் ஆன்ட்டி" என்றாள் கீர்த்தி.
"என்னது? எப்படி நீ அவங்களை பாத்ரூமுக்கு கூட்டிகிட்டு போவ? டாக்டர் என்ன சொன்னார்னு உனக்கு ஞாபகம் இல்லையா? அவங்க நடக்கக் கூடாதுன்னு சொன்னார்ல?" என்றான் மகிழன்.
"நீ அதைப் பத்தி கவலைப்படாத தம்பி. நாங்க தான் இருக்கோமே. நாங்க மின்னலுக்கு ஹெல்ப் பண்றோம். நீ கொஞ்ச நேரம் வெளியில இரு" என்றார் வடிவுக்கரசி.
அவர் எந்த விதத்தில் உதவப் போகிறார் என்று புரிந்தது மகிழனுக்கு. அவன் கதவை நோக்கி நடந்தான். அவன் எதிர்பார்த்தது படியே, கட்டிலுக்கு அடியில் இருந்த பெட்பேனை எடுத்தார் வடிவுக்கரசி. அதை கண்ட மகிழன் நின்றான்.
"அத்தை இந்த வேலையை நீங்க செய்ய வேண்டாம். கீர்த்தி செய்வா" என்றான்.
YOU ARE READING
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...