43 அந்தாக்ஷரி

2.4K 92 11
                                        

43 அந்தாக்ஷரி

சிவகாமியும், வடிவுக்கரசியும், மின்னல்கொடியுடன் தங்கிக் கொண்டார்கள். தனது கால் வலியை மறந்தே போனார் மின்னல்கொடி. எப்போதும் இல்லாத அளவிற்கு, சிவகாமியுடனும் வடிவுக்கரசியுடனும் பழைய கதைகளை பேசி சிரித்தபடி இருந்தார் அவர். அவர்களது வாழ்வில் நிகழ்ந்த ரகளையான நிகழ்வுகளை அந்த மூவரும் அசை போட்டுக் கொண்டிருந்தார்கள். அது பூங்குழலியின் யோசனை தான். அவள் தான், பழைய கதைகளை பேசி மின்னல்கொடியை குதூகலமாய் வைத்துக் கொள்ளச் சொல்லி தன் அம்மாவிடமும் அத்தையிடமும் கூறியது. அவர்களுடன் வெறுப்பே வடிவாய் அமர்ந்திருந்தாள் கீர்த்தி. அவளை உட்கார விடாமல் ஓடவிட்டுக் கொண்டிருந்தார் வடிவுக்கரசி. அவர்களை சபித்தபடி அதை செய்து கொண்டு இருந்தாள் கீர்த்தி வேறு வழியின்றி.

*தேங்காய் எண்ணெயை தரையில கொட்றதுக்கு முன்னாடி நான் ஜாக்கிரதையா இருந்திருக்கணும். பூங்குழலி அங்க இருந்ததை நான் எப்படி கவனிக்காம விட்டேன்? அந்த சண்டாளி எல்லாத்தையும் தலைகீழா மாத்திட்டாளே... எல்லாம் என்னால தான் வந்தது...* தனக்குத்தானே புலம்பி தீர்த்தாள் கீர்த்தி.

வடிவுக்கரசியின் குரல், அவளது புலம்பலை தடுத்தது.

"கீர்த்தி, தண்டபாணி கிட்ட சொல்லி மின்னலுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வா" என்றார்.

அவர் கூறியதை தண்டபாணியிடம் கூற, முனுமுனுத்தபடி அங்கிருந்து சென்றாள் கீர்த்தி. வடிவுக்கரசி அங்கு வந்ததற்கு பிறகு, அவள் சமையலறைக்கு செல்வது இது ஆறாவது முறை.

இரவு

தங்கள் அறைக்கு வந்தாள் பூங்குழலி. மலரவனை சிறிதும் ஏறெடுத்து பார்க்காமல், தனக்கு கொஞ்சம் கூட பதற்றமே இல்லை என்பது போல் காட்டிக்கொண்டாள். மென்மையான புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் மலரவன். வழக்கம் போல் உடைமாற்றிக் கொள்ள குளியலறைக்கு சென்றாள் பூங்குழலி. ஒற்றை வார்த்தையை கூட உதிர்க்காத மலரவனின் பார்வை, அவளையே பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ