11 மலரவனின் நிலைப்பாடு

1.7K 76 6
                                    

11 மலரவனின் நிலைப்பாடு 

அன்பு இல்லம்

தங்களை மதிக்காமல், மலரவன் அவனது அறைக்கு சென்று விட்ட பின், அன்பு இல்லத்திலிருந்து சென்று விடலாம் என்று முடிவெடுத்தார்கள் குமரேசன் குடும்பத்தினர். அதே நேரம், மணிமாறனும் மின்னல்கொடியும் உள்ளே நுழைய, அவர்களை கண்ட குமரேசன் குடும்பத்தினர், அங்கிருந்து செல்லும் முடிவை மாற்றிக் கொண்டார்கள். விதியே என்று அவர்களைப் பார்த்து சிரித்தார் மின்னல்கொடி. ஆனால் மணிமாறனோ, எரிச்சல் அடைந்தார். மகிழனால் அவர்கள் ஏற்கனவே பிரச்சனையில் இருக்கிறார்கள். பூங்குழலியும் மலரவனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டாள்.  போதா குறைக்கு, இவர்கள் வேறு அவர்களை எரிச்சலூட்ட வந்து விட்டார்கள்.

"எப்ப வந்த?" என்றார் மணிமாறன் விருப்பம் இல்லாமல்.

"அரை மணி நேரம் ஆச்சு" என்றார் குமரேசன்.

"ஓ... எங்களுக்காக தான் காத்திருக்கீங்களா?"

"ஆமாம்... ஆனா, உன் பிள்ளை எங்க காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்திட்டான்"

மணிமாறனும் மின்னல்கொடியும் திகைத்தார்கள்.

"எதுக்காக அவன் இப்படி இருக்கான், மாறா? அவன் பெரிய பிசினஸ்மேனா இருந்தா என்ன? அவனுக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியாதா? எங்ககிட்ட அவன் எவ்வளவு ரூடா பேசினான் தெரியுமா? எங்க கிட்ட அவனுக்கு என்ன பிரச்சனை?"

"அவன்கிட்ட நீ எதை பத்தி பேசின?" இறுக்கமாக கேட்டார் மணிமாறன்.

"நான் வேற எதை பத்தி பேச போறேன்? கீர்த்திக்கு அவனை பிடிச்சிருக்குன்னு சொன்னேன்"

"உன்னை யார் அவன் கிட்ட பேச சொன்னது? நான் சொன்னேனா? நீயா தானே அவன் கிட்ட போய் பேசின? நான் தான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே, அவனுக்கு கீர்த்தியை பிடிக்கலைன்னு, அப்புறம் எதுக்காக நீ அவன் பின்னாடியே அலைஞ்சுகிட்டு இருக்க?" அவர் குரலை உயர்த்தி கடுப்பாய் கேக்க, குமரேசன் பின்வாங்கினார்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now