13 செயல் வல்லமை

2.2K 89 9
                                        

13 செயல் வல்லமை

தில்லையின் வீட்டிலிருந்து கிளம்பிய மலரவன் மணிமாறனுக்கு ஃபோன் செய்தான். அவர் அந்த அழைப்பை ஏற்றார்.

"எங்க பா இருக்கீங்க?"

"ஆஃபீஸ்ல இருக்கேன்"

"கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா?"

"இப்பவா?"

"ஆமாம்,  கொஞ்ச நேரம் வந்துட்டு போங்களேன்"

"ஏதாவது முக்கியமான விஷயமா?"

"பூங்குழலி கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டா"

"அப்படியா?"

"ஆமாம்"

"இதை நீ எப்படி டா சாதிச்ச?"

"நீங்க வீட்டுக்கு வாங்க. அதை பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"நான் இதோ கிளம்பிட்டேன்" அழைப்பை துண்டித்தார்.

அவர் அவசரமாய் வெளியே செல்வதை பார்த்த மகிழன்,

"எங்கப்பா இவ்வளவு அவசரமா ஓடுறீங்க?"

"வீட்டுக்கு"

"எதுக்குப்பா?"

"மலரவன் வர சொன்னான்"

"ஏதாவது பிரச்சனையா?"

"நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" அவனிடம் எதுவும் கூறாமல் அலுவலகத்தை விட்டு கிளம்பினார் மணிமாறன்.

அன்பு இல்லம்

மலரவன் வந்து சேர்வதற்கு முன்பாகவே, மணிமாறன் வந்து சேர்ந்து விட்டார். மின்னல்கொடியை தேடியபடி வீட்டிற்குள் நுழைந்தார். சமையலறையில் இருந்து தண்டபாணி வெளியே வருவதை கண்ட அவர்,

"மின்னல் எங்க?" என்றார்.

"அம்மா அவங்க ரூம்ல இருக்காங்க ஐயா" என்றார் தண்டபாணி.

"சரி"

நாலு தாவலில் மாடிப்படிகளை கடந்து தங்கள் அறையை அடைந்தார் மணிமாறன். அவர் அப்படி ஓடி வருவதை பார்த்த மின்னல்கொடி  குழப்பத்தில் முகம் சுருக்கினார். இது, அவர் அலுவலகத்தில் இருக்க வேண்டிய நேரம் ஆயிற்றே...? அவர் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora