23 பிரச்சனையில் மகிழன்
அடுத்த மூன்று நாள் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து சென்றது. பந்தக்கால் நட்டாகிவிட்டது. பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் வைக்க வேண்டிய நலங்கு வைபவம் முடிந்து, கிளம்பிச் சென்றார் மின்னல்கொடி.
தன் முகத்தை கழுவிக்கொள்ள தன் அறைக்கு வந்தாள் பூங்குழலி. அவள் குளியலறைக்கு செல்லும் முன், அவளது கைபேசி ஒலித்தது. அதை எடுத்து, அந்த அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது என்று பார்த்தாள். அது மாப்பிள்ளையின் அழைப்பு. சிரித்தபடி ஏதோ யோசித்த அவள், அந்த அழைப்பை ஏற்கவில்லை. மணி அடிப்பது ஓய்ந்தது. அவள் எதிர்பார்த்தபடியே மீண்டும் அது ஒலிக்கத் துவங்கியது. இந்த முறை அவள் அந்த அழைப்பை ஏற்றாள். அவள் ஏதும் கூறும் முன்,
"நான் மறுபடியும் ஃபோன் பண்றேன்னா இல்லையான்னு செக் பண்றியா பூங்குழலி?" என்றான் மலரவன், அவளை பேச்சிழக்க செய்து.
"நலங்கு முடிஞ்சு நான் இப்ப தான் ரூமுக்குள்ள வரேன்" பொய் கூறினாள் அவள்.
"ஓ முடிஞ்சிருச்சா?" என்றான்.
"ம்ம்ம்"
"எனக்கு இந்த சடங்கு ரொம்ப பிடிச்சிருக்கு"
"ஓ..."
"எனக்கு நலங்கு வெச்ச மிச்ச சந்தனத்தை தான் எங்க அம்மா உனக்கு நலங்க வைக்க கொண்டு வந்தாங்க தெரியுமா?" என்றான்.
அவள் கரம், அனிச்சையாய் அவளது கன்னத்தை தொட்டது.
"கேட்கவே செம ரொமான்டிக்கா இருக்கு இல்ல" என்றான் குரலில் குழைவை காட்டி.
அவன் அதை எந்த அர்த்தத்தில் கூறுகிறான் என்று அவளுக்கு புரிந்து தான் இருந்தது.
"உன் கன்னத்துல பூசின சந்தனம், என்னை தொட்டுட்டு வந்திருக்கு, பூங்குழலி" என்றான்.
பூங்குழலியின் ரத்தம் கொதிப்பது போல் இருந்தது. ஏன் இப்படி எல்லாம் பேசி அவளது மூச்சை அவன் நிறுத்துகிறான்...!
"தயவு செய்து இப்படி எல்லாம் பேசுறதை நிறுத்துறீங்களா, மலர்?" என்றாள் மென்மையாய்.
YOU ARE READING
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...