57 வேலை முடிந்தது
தான் கொடுத்த பணப் பையுடன் வந்திருந்த ராகேஷை பார்த்து முகம் சுருக்கினார் குமரேசன்.
"சொல்லு ராகேஷ், என்ன விஷயம்?"
"நான் இதை உங்ககிட்ட திரும்பி கொடுக்க வந்திருக்கேன் சார்"
"திருப்பி கொடுக்க வந்திருக்கேன்னா என்ன அர்த்தம்? இது நான் உனக்கு பணம் கொடுத்த அதே பேக் தானே?"
"ஆமாம் சார்"
"என்ன ஆச்சு ராகேஷ்? எதுக்காக நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குற? ஏதாவது பிரச்சனையா?"
"ஆமாம் சார். போலீஸ் என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்காங்க. அவங்க என்னை ரொம்ப ஸ்ட்ராங்கா சந்தேகப்படுறாங்க. ஏதாவது ஒரு கேஸ்ல நான் சிக்க மாட்டேனான்னு காத்துகிட்டு இருக்காங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு, சார்"
"நம்ம கிட்ட தான் சரியான அக்ரீமெண்ட் பேப்பர்ஸ் இருக்கே... அப்படி இருக்கும் போது நீ எதுக்காக பயப்படுற? நான் இருக்கேன் உனக்கு"
"அதை தான் சார் நானும் உங்ககிட்ட கேட்க நினைச்சேன். நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும், சார்"
"நீ என்ன சொல்ல வர?"
"தயவுசெய்து எனக்கு உங்க கம்பெனியிலேயே ஒரு வேலை போட்டு கொடுத்துடுங்க, சார். இவ்வளவு நடந்ததுக்கு பிறகு, என்னால இனிமே மணிமாறன் சார் கம்பெனியில வேலை செய்ய முடியாது. கழுகு மாதிரி என்னை கொத்தி தின்ன காத்துகிட்டு இருக்கான் மகிழன். அவன் எப்போ என்னை கிழிக்க போறானோ எனக்கு தெரியல. என்னோட சூழ்நிலையை தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க சார். என்னை அழுத்திகிட்டு இருக்கிற இந்த பிரச்சனையில இருந்து என்னை காப்பாத்துங்க"
சிறிது நேரம் யோசித்தார் குமரேசன். அவருக்கும் கூட தனக்கு நம்பகமான ஒரு வேலையாள் தேவை தான். ராகேஷ் அப்படிப்பட்ட ஒருவனாய் நிச்சயம் இருப்பான். ஏனென்றால், ராகேஷுக்கு அவரைத் தவிர வேறு யாரும் உதவ மாட்டார்கள். அதனால் ராகேஷை தன்னுடன் வைத்துக் கொள்வது நல்ல உபாயம் தான். எப்படி இருந்தாலும் அவர் மணிமாறனின் குடும்பத்தை தீர்த்து கட்ட தானே போகிறார்? ஒருவேளை, அவரது திட்டம் தோல்வி அடைந்தால், அந்த பழியை சுமத்த அவருக்கு ஒருவர் தேவை. அதற்கு ராகேஷ் தான் சிறந்தவனாய் இருப்பான். ஏனென்றால், ஏற்கனவே தங்களுக்கு தீங்கிழைத்த அவனை, நிச்சயம் மணிமாறனின் குடும்பத்தார் நம்ப மாட்டார்கள்.
YOU ARE READING
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...