24 சூழ்நிலை கைதி

1.5K 77 9
                                    

24 சூழ்நிலை கைதி

அந்த அறைக்குள் நுழைந்த குமரேசனும், சுஜாதாவும், மகிழன் கீர்த்தியின் மேல் விழுந்து கிடப்பதை கண்டார்கள்.

"கீர்ர்ர்த்தி..."  சுஜாதா அரற்றினார்.

மகிழனை பிடித்து தள்ளிய கீர்த்தி, அவள் உடலை சுற்றி இருந்த துண்டை கெட்டியாய் பற்றிக் கொண்டாள், அது தளர்ந்து விட்டிருந்ததால்.

"அம்ம்ம்ம்மா...." அவள் அழத் தொடங்கினாள்.

கட்டிலின் மீது இருந்த ஒரு போர்வையை எடுத்து தன்னை முழுவதுமாய் போர்த்திக்கொண்டு, சுஜாதாவை நோக்கி ஓடிச் சென்ற அவள், அவரது தோளில் சாய்ந்து கொண்டு ஓவென்று அழுதாள்.

"என்ன நடந்தது கீர்த்தி?" என்றார் சுஜாதா மகிழினை பார்த்தபடி.

"அவன் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான். அவன் குடிச்சிருக்கான்" என்று அழுகையை தொடர்ந்தாள்.

கீழே ஒரு மது பாட்டில் உருண்டு கொண்டிருந்ததை பார்த்த அவர்கள், தங்கள் பார்வையை மகிழனின் பக்கம் அருவருப்புடன் திருப்பினார்கள்.

"இல்ல அங்கிள். அவ என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கா. நான் எதுவும் செய்யல" நிலைமையை சமாளிக்க முயன்றான் மகிழன்.

"பொய் சொல்றதை நிறுத்து, நீ செஞ்சதை நாங்க தான் பார்த்தோமே, நீ தானே அவ மேல விழுந்து கிடந்த? இல்லன்னு சொல்லுவியா நீ?" சீறினார் குமரேசன்.

"இல்ல அங்கிள். அவ தான் என் மேல விழுந்தா" என்று உண்மையை கூறினான் மகிழன்.

"எவ்வளவு தைரியம் இருந்தா, நீ என் பொண்ணு மேல பழி சுமத்துவ?" உறுமினார் குமரேசன்.

"இல்ல அங்கிள். நான் அவ மேல பழி போடல. அவ கால் தடுக்கி தான் என் மேல விழுந்தா"

சத்தம் கேட்டு,வெளியே நடைபாதையில் நின்று கொண்டிருந்த அனைவரும் அந்த அறையின் முன் கூட துவங்கினார்கள். உள்ளே நடப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ள எட்டிப் பார்த்தார்கள். அதில் மின்னல்கொடியின் அத்தை மகளும் ஒருவர். சூழ்நிலையை புரிந்து கொண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now