21 காதலிக்கிறேன்
மகிழனின் அறைக்குள் புயலென நுழைந்தார் மணிமாறன். தனது நாற்காலியை விட்டு எழுந்த மகிழன், தலை குனிந்து நின்றான். கதவை சாத்தி தாழிட்ட மணிமாறன்,
"ஆஃபீஸ் டைம்ல என்ன வேலை செஞ்சுகிட்டு இருக்க நீ? பொறுப்புங்கிறது உனக்கு இம்மி அளவுக்கும் இல்லையா?" பொறுமினார் அவர்.
ஒன்றும் பேசாமல் நின்றான் மகிழன். தன் நண்பனின் பெயரை அவரிடம் அவனால்கூற முடியாது. அப்படி கூறினால், அவனது சீட்டு கிழிந்து விடும். அவன் நடுத்தெருவுக்கு வந்துவிடுவான்.
"வாயை திறந்து பேசுடா முட்டாள்" கொதித்தார் மணிமாறன்.
வாய் திறக்கவில்லை மகிழன்.
"மலரவனுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. ஏற்கனவே உன்னால நம்ம கௌரவம் கெட்டுப் போய் கிடக்கு. தயவு செய்து எங்களை மத்தவங்க முன்னாடி தலைகுனிய வச்சுடாத. உன்னை குடிக்காதேன்னு நான் சொல்ல மாட்டேன். ஏன்னா, நான் சொன்னாலும் நீ என் வார்த்தையை மதிக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா நீ ஆஃபீஸ்ல குடிச்சா, அதை என்னால பொறுத்துக்க முடியாது. ஜாக்கிரதை..." கோபத்துடன் அங்கிருந்து சென்றார் மணிமாறன்.
சத்தம் இன்றி, மெல்ல அவனது அறைக்குள் புகுந்தான் ராகேஷ் தோய்ந்த முகத்துடன்.
"என்னை மன்னிச்சிடு மகிழா... " என்றான்.
"நான் இன்னும் எதையெல்லாம் பொறுத்துக்கணுமோ" தெரியல என்றான் மகிழன் வெறுப்புடன்.
"என் பேரை சொல்லாமல் இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மகிழா"
"விடு, இது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல. இப்பெல்லாம் எங்க அப்பா கிட்ட இருந்து இதைவிட மோசமான ரியாக்ஷனை தான் நான் பாக்குறேன்"
"பெத்தவங்கனாலே அப்படி தான். அவங்க நம்ம உணர்வுகளை புரிஞ்சிக்கவே மாட்டாங்க. ஆனா, நம்ம மட்டும் அவங்களை புரிஞ்சிக்கணும்ன்னு எதிர்பார்ப்பாங்க. இது எல்லாத்துக்கும் உங்க அண்ணன் தான் காரணம். நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன பொண்ணை அவர் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்? அவரு ரொம்ப நல்லவர்னு எல்லாரும் நினைக்கணுமா?" மகிழனின் மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெயை வார்க்க முயன்றான் ராகேஷ்.
VOUS LISEZ
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Roman d'amourலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...
