29 இது உங்களுக்கல்ல
தன் அப்பாவுக்கு அழைப்பு விடுத்தாள் கீர்த்தி.
"ஹலோ பேபி. குட் மார்னிங். எப்படி இருக்க?" என்றார் குமரேசன்.
"நான் நல்லா இல்ல... இந்த மார்னிங் எனக்கு மட்டும் இல்ல, உங்களுக்கும் குட்டா இருக்க போறது இல்ல"
"நீ என்ன சொல்ற?"
"தன்னோட வீட்ல 25 லட்சம் வச்சிருந்ததுக்காக ராகேஷை போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க"
'என்ன சொல்ற? உனக்கு எப்படி தெரியும்?"
"இப்போ தான் மித்திரன் ஃபோன் பண்ணி, மலரவன்கிட்ட விஷயத்தை சொன்னான்"
"ஆனா அவன் வீட்டுக்கு போலீஸ் எப்படி போனாங்க?"
"அவங்க நார்காடிக் டிபார்ட்மென்ட். ராகேஷ் ட்ரக்ஸ் யூஸ் பண்றதா யாரோ கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க போல இருக்கு"
"எனக்கு தெரிஞ்ச வரைக்கும், அவனுக்கு அப்படி எந்த ஒரு பழக்கமும் இல்லையே"
"அவன் யாருக்கும் தெரியாம அதை யூஸ் பண்ணி இருக்கலாம். இது ஒன்னும் வெட்ட வெளிச்சமா செய்யக்கூடிய விஷயம் இல்லையே"
"நீ சொல்றதும் சரி தான்"
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாட். ஒருவேளை ராகேஷ் நம்மளை பத்தி போலீஸ்ல சொல்லிட்டா என்ன செய்றது?"
பதில் கூறவில்லை குமரேசன். அவரும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தார்.
"அவன் உண்மையை சொல்லிட்டா என்ன ஆகும்? ஏற்கனவே மகிழன் என் மேல கொலை காண்டுல இருக்கான். நேத்து ராத்திரி ஃபுல்லா என்னை அவனோட ரூம்குள்ளயே விடல"
"என்ன்னனது...???"
"ஆமாம் டாட். அவன் என் மேல அவ்வளவு கோவத்துல இருக்கான்.என்னை அவன் ரூம்மில் இருந்து வெளியில பிடிச்சி தள்ளி விட்டுட்டான்... ராத்திரி முழுக்க வெளியிலேயே நிக்க வச்சான்"
"அவனுக்கு எவ்வளவு தைரியம்..."
"அவனுக்கு தைரியம் இருக்கு... அவன் நம்ம நெனச்ச மாதிரி இல்ல... அவனை நம்ம வழிக்கு கொண்டு வர முடியும்னு எனக்கு தோணல"
![](https://img.wattpad.com/cover/341557334-288-k764393.jpg)
STAI LEGGENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Storie d'amoreலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...