20 மலரவனின் காதல்

1.7K 79 12
                                    

20 மலரவனின் காதல்

எம் எம் நிறுவனம்

மணிமாறனுடன், மித்திரனும், மகிழனும் ஒரு மீட்டிங்கில் இருந்தார்கள். அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்கள், டீலர்கள், மற்றும் ஏஜென்ட்கள் அங்கு கூடியிருந்த போதிலும், அது வியாபார நிமித்தமான கூட்டமாக படவில்லை. மலரவனின் திருமணத்திற்கு அனைவரையும் ஒவ்வொருவராக சென்று அழைக்க நேரமில்லாததால், அப்படி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் மணிமாறன்.

தான் ஏன் பூங்குழலியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அனைவருக்கும் பதிலளித்து வெறுத்துப் போனான் மகிழன். மறுபக்கம், மணிமாறனோ, ஏன் மலரவன் பூங்குழலியை திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆர்வத்துடன் அனைவருக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர் கூறியது வெகு எளிமையான பதில். *அவனுக்கு அவளை பிடித்திருக்கிறது* என்பது தான்.

கூட்டம் முடிந்து அனைவரும் ஒவ்வொருவராக கலைய துவங்கினார்கள். தன் நண்பனுக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை எண்ணி மித்திரனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அப்போது அங்கு வந்த மலரவனை பார்த்த அவனது முகம் மேலும் பூரித்து போனது. ஓடிச் சென்று அவனை ஆரத் தழுவிக் கொண்டான் மித்திரன்.

"கங்கிராஜுலேஷன்ஸ் மலரா... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு"

" தேங்க் யு டா"

"எதுக்காக, தி கிரேட் மலரவன் இங்க வந்திருக்கான்னு நான் கெஸ் பண்ணட்டுமா?"

ஒன்றும் கூறாமல் புன்னகையுடன் நின்றான் மலரவன்.

" உன் வருங்கால மனைவியோட வெட்டிங் டிரஸ்சை டிசைன் பண்ண தானே வந்திருக்க?"

"மித்திரன் கெஸ் பண்ணா தப்பாகுமா?" சிரித்தான் மலரவன்.

கான்பிரன்ஸ் அறையில் இருந்து வெளியே வந்த மக்கள், மலரவனை கண்டதும் அவனை சூழ்ந்து கொண்டார்கள். அந்த காட்சியைக் கண்ட மகிழன் திகைத்து நின்றான். மலரவனை அங்கு பார்த்த அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அங்கிருந்த அனைத்து கண்களும் அவனையே மொய்ப்பது போல் இருந்தது அவனுக்கு. மெல்ல பின்னோக்கி நகர்ந்த அவன், மீண்டும் கான்ஃபரன்ஸ் அறைக்கு சென்றுவிட்டான். அந்த கூட்டத்திற்கு வந்திருந்த சில டீலர்கள் அவனைப் பற்றியும் மலரவனை பற்றியும் பேசிக் கொண்டது அவன் காதில் விழுந்தது.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now