44 தலைகனம் பிடித்தவன்

2.2K 90 8
                                        

44 தலைக்கனம் பிடித்தவன்

மறுநாள் காலை

மலரவனுக்கோ, பூங்குழலிக்கோ கட்டிலை விட்டு இறங்கும் எண்ணமே இருக்கவில்லை. அவர்கள் உறங்கவும் இல்லை கண்ணை திறக்கவும் இல்லை. பேசிக்கொள்ளவும் இல்லை விலகிச் செல்லவும் இல்லை. இருவருக்கும் தெரியும், மற்றவர் விழித்து விட்டார் என்று. கடிகாரத்தை நோக்கி திரும்பி, மணியைப் பார்த்தாள் பூங்குழலி.

"மலர்..."

"ம்ம்ம்ம்"

"மணி 6 ஆயிடுச்சு"

"ம்ம்ம்"

"நான் ஆன்ட்டியை போய் பாத்துட்டு வரேன்"

"நம்ம அப்புறமா போகலாம்"

"நீங்க அப்புறமா வாங்க. நான் போறேன்"

"அதான் சிவகாமி ஆன்டியும், அத்தையும் அவங்க கூட இருக்காங்கல்ல"

"அதனால தான் நான் போயாகணும். மின்னல் ஆன்ட்டி என்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஆனா அம்மாவும் அத்தையும் என்னை ஓட விட்டு அடிப்பாங்க."

கேட்டு சிரித்த மலரவன்,

"சரி நீ போ. நான் அப்புறம் வரேன்" என்றான்.

"ம்ம்ம்"

அவளது இடையை வளைத்திருந்த கையை நீக்கினான் மலரவன். எழுந்து அமர்ந்த பூங்குழலி, தன் குழலை சரிப்படுத்திக் கொண்டாள். ஒரு தலையணையை இழுத்து, கவிழ்ந்து படித்துக் கொண்டான் மலரவன். அதைக் கண்ட பூங்குழலி, புன்னகை புரிந்த படி அவன் முதுகில் சாய்ந்தாள். அவளது அந்த செயல், மலரவனின் முகத்தில் புன்னகையை இட்டு வந்தது.

"நீ போகலையா?" என்றான் புன்னகையுடன்.

"ம்ம்ம்"

"அத்தை கிட்ட திட்டு வாங்க போற"

"ம்ம்ம்"

"அவங்க கேட்டா என்ன சொல்லுவ?"

"ஒரு ஆளு என்னை மயக்கிட்டாரு. அதனால, வர லேட் ஆயிடுச்சின்னு சொல்லுவேன்"

"நீ மயங்கி போயிட்டியா?" சிரித்தான் அவன்.

"ரொம்ப ஆடாதீங்க"

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Wo Geschichten leben. Entdecke jetzt