31 காசோலை
"பேசா மடந்தையா நீ? நீ பேசின பேச்சை தான் நான் பார்த்தேனே..." அவளை கிண்டலடித்தான் மலரவன்.
அவள் அவனைப் பார்த்து முறைக்க,
"நான் தான் சொன்னேனே, எந்த பொண்டாட்டியாலயும் புருஷன் கிட்ட பேசாம இருக்கவே முடியாதுன்னு..."
"போதும்... லைட்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்" பேச்சை மாற்ற முயன்றாள் பூங்குழலி.
"அதுல டிஸ்கஸ் பண்ண எதுவும் இல்ல. என்ன செய்யணும்னு நான் ஸ்டீவுக்கு சொல்லிட்டேன். அவன் அதை முடிச்சுட்டான்"
"அப்புறம் எதுக்கு உங்க கிட்ட என்னை அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண சொன்னாரு?"
"நான் என்ன சொல்றேனோ அதை செய்ய வேண்டியது தானே அவனுடைய வேலை?"
"அப்படி செய்யச் சொல்லி அவர்கிட்ட சொன்னது நீங்க தானா?" என்றாள் அதிர்ச்சியாக.
ஆமாம் என்று தலையசைத்தான்.
"ஆனா ஏன்?"
"உன்னை என்கிட்ட பேச வைக்க தான்"
"நீங்க பொய் சொன்னீங்களா?"
"ஆமா, நீ என்கிட்ட இருபத்தி நாலு மணி நேரத்துக்கு பேச மாட்டேன்னு சொன்ன இல்ல? அந்த மாதிரி" என்று சிரித்தான்.
"இப்பல்லாம் நீங்க என்கிட்ட ரொம்ப வம்பு பண்றதா உங்களுக்கே தோணலையா?" என்றாள் தன் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு.
"இப்பல்லாமா? நமக்கு கல்யாணம் ஆனதே நேத்து தானே?"
"நீங்க என்னை வம்புக்கு இழுக்கிறதை, ரொம்ப நாளைக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டீங்க. நம்ம கல்யாணம் முடிவான உடனேயே..."
"முதல் சந்திப்பிலேயே கலகலன்னு என்கிட்ட பேசினா அந்த பொண்ணை தேடி கண்டுபிடிக்கத் தான் அப்படி எல்லாம் செஞ்சேன்"
அசந்து போனாள் பூங்குழலி.
"நீ இப்படி அமைதியா இருக்கிறது உனக்கு பொருந்தவே இல்ல தெரியுமா...! நீ முதல்ல இருந்த மாதிரி இப்பவும் இருக்கணும்னு தான் நான் விரும்புறேன்" என்றான் சீரியஸாக.
VOCÊ ESTÁ LENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...
