14 திருமண தேதி
தில்லை இல்லம்
தன்னை மறந்து எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த சிவகாமியின் கரத்தை தொட்டார் வடிவுக்கரசி.
"என்ன யோசிச்சுகிட்டு இருக்க சிவகாமி?"
"நான் வேற என்னக்கா யோசிக்க போறேன்? குழலியோட கல்யாணத்தைப் பத்தி தான்"
"அவளை தான் மலரவன் தம்பி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாரே..."
"இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணுமேன்னு தான் கா என்னோட கவலை எல்லாம்"
"ஏன் உனக்கு இந்த கவலை?"
"மகிழன் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதால, ஏற்கனவே அவ ரொம்ப உடைஞ்சு போயிருந்தா. இந்த கல்யாணத்துக்கும் ஏதாவது தடங்கள் வந்துடுமோன்னு எனக்கு பயமாயிருக்கு. மலரவன் சாதாரண ஆள் இல்ல. உங்க தம்பி அவரைப் பத்தி பேசாத நாளில்ல. அவ்வளவு பெரிய ஆளு நம்மளை மாதிரி ஒன்னும் இல்லாத வீட்ல பொண்ணு எடுக்கறது தெரிஞ்சா, யாரும் சும்மா இருக்க மாட்டாங்க அக்கா. அவரை தன் மகளுக்கு வளச்சி போட நிறைய பணக்காரங்க காத்துகிட்டு இருக்காங்க. யாராவது ஒன்னு கிடைக்க ஒன்னை பேசி, இந்த கல்யாணத்தை கலைச்சிடுவாங்களோன்னு எனக்கு பயமாயிருக்கு. அப்படி நடந்தா, இந்த ஜென்மத்துக்கு குழலி கல்யாணமே பண்ணிக்க மாட்டா"
"நீ சொல்றதும் சரி தான். குதிரை மாதிரி ஒரு பொண்ணு, மலரவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்ததை நான் கூட கவனிச்சேன். அந்தப் பொண்ணோட அப்பாவும், மாறணும் ஃபிரண்டுங்க போல தெரியுது..." என்றார் ரகசியமாய்.
"பார்த்தீங்களா... நான் சொன்னேன்ல?" பரிதவித்தார் சிவகாமி.
ஆம் என்று தலையசைத்தார் வடிவக்கரசி.
"இந்த கல்யாணத்தை சீக்கிரமே நடத்திட்டா என்னக்கா?"
யோசனையுடன் அவரை ஏறிட்டார் வடிவுக்கரசி.
"வருஷம் திரும்புறதுக்கு முன்னாடி, கல்யாணம் பண்றது நம்ம குடும்பத்துல வழக்கம் இருக்கு. கெட்டது நடந்த வீட்ல ஒரு நல்லது நடக்கணும்னு அப்படி செய்வாங்க"
ESTÁS LEYENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...
