27 கணவனின் கடமை

1.6K 83 7
                                    

27 கணவனின் கடமை

மெல்ல மகிழனின் அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் கீர்த்தி. அதைக் கண்டு கோபமடைந்த மகிழன், கட்டிலை விட்டு கீழே இறங்கி, அவளை நோக்கி விரைந்து சென்றான்,

"எதுக்காக நீ என் ரூமுக்குள்ள வந்த?" என்று சீறியபடி.

"கோபப்படாதீங்க... நமக்கு வாழ்க்கை இருக்கு" என்றாள் அவனை சமாதானப்படுத்தும் நோக்கில்.

"வாழ்க்கையா? எந்த வாழ்க்கையைப் பத்தி பேசுற? என் வாழ்க்கையை நாசம் பண்ணவளே நீ தான். அதை பத்தி பேசுற அருகதை உனக்கு கிடையாது"

"நான் என்ன செய்ய முடியும்? அதுல என்னோட தப்பு என்ன இருக்கு? உங்களை நான் சாராய பாட்டிலோட பார்த்தேனே..."

"நான் உன்கிட்ட தப்பா நடந்துகிட்டேன்னு நீ சொன்ன... நான் அப்படி நடந்துகிட்டேனா? நான் உன்னை தொட கூட இல்ல..."

கீர்த்தி ஏதோ சொல்ல முயல,

"உன்னோட நடத்தைக்கு நியாயம் கற்பிக்க முயற்சி பண்ணாத. நீ என்ன செஞ்சன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. என்னை வலுக்கட்டாயமா உன் மேலே இழுத்துக்கிட்டு, கட்டில்ல விழுந்த. மரியாதையா இங்கிருந்து போய்டு"

"நான் எங்கே போவேன்?"

"உங்க அப்பன் ஆத்தாகிட்ட போ. அவங்க தானே உன்னோட நாடகத்துக்கு முக்கிய கதாபாத்திரம்..."

"என்னது...? நாடகமா?"

"எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா? கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நீ மலரவன் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தது எனக்கு தெரியாதா? அவனுக்கு கல்யாணம் நிச்சயமா ஆனதுக்கு பிறகு, என் மூலமா, என்னோட மனைவியா இந்த வீட்டுக்கு வந்து, அவனை அடையலாம்னு பாக்குற. அதுக்காகத் தான் என் குடும்பத்துக்குள் நீ வந்திருக்க"

கீர்த்தி திகிலுடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். இந்த அளவிற்கு மதி யூகம் நிறைந்தவனா மகிழன்? மகிழன் அவளது உண்மை எண்ணத்தை புரிந்து கொண்டு, அதை கூறவில்லை தான். அவன் அதை கோபத்தில் தான் கூறினான். ஆனால் துரதிஷ்டவசமாய், அவன் கூறியது உண்மை.

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now