54 சகோதரர்களின் குறி
அன்பு இல்லம்
தனது அறைக்கு வந்த மலரவன், தனது கைபேசியை எடுக்க நினைத்த போது, பூங்குழலி கட்டிலின் மீது அமர்ந்தபடி தன்னையே கூர்மையாய் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். அவளிடம் வந்த அவன், அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
"என் மேல அப்சட்டா இருக்கியா?" என்றான்.
அவள் *இல்லை* என்ற தலையசைத்து விட்டு, மீண்டும் *ஆமாம்* என்று தலையசைத்தாள்.
"ஐ அம் சாரி"
"எதுக்காக நான் கோவிலுக்கு போக வேண்டாம்னு சொல்றீங்க?"
"பூங்குழலி, நம்ம கண்டிஷன் இப்போ நார்மலா இல்ல. நம்ம இப்ப தான் ரொம்ப பெரிய பிரச்சனையை கடந்து வந்திருக்கோம். அதை சாதாரணமான விஷயமா நான் நினைக்கல. நம்ம எச்சரிக்கையா இருக்கணும். கீர்த்தி நம்ம வீட்ல இல்ல. அவ எதுக்காக அவ்வளவு அவசரமா நம்ம வீட்டை விட்டு போனான்னு எனக்கு தெரியல. அவ மனசுல எந்த ஒரு மோசமான திட்டமும் இருக்காதுன்னு நம்மால உறுதியா சொல்ல முடியாது"
"உங்களுக்கு பயமா இருக்கா?"
சில நொடிகள் அவளை பார்த்துக் கொண்டிருந்த அவன், ஆம் என்று தலையசைத்தான்.
"எனக்கு பயமா தான் இருக்கு. உனக்கு ஏதாவது ஆனா, அதை என்னால தாங்க முடியாது" என்றான்.
"எனக்கு ஒன்னும் ஆகாது"
"நிச்சயமா எதுவும் ஆகக்கூடாது...! ஆனா, சில விஷயங்கள் நம்ம கையில இல்ல. அதை நம்மால மாத்தவும் முடியாது. நம்மளை வீழ்த்தனும்னு நினைக்கிறவங்களுக்கு நான் சந்தர்ப்பம் கொடுக்க விரும்பல. அதனால, நான் சொல்ற வரைக்கும் தயவு செய்து எங்கேயும் போகாத"
அவள் சரி என்று புன்னகையுடன் தலையசைக்க, உணர்ச்சிவசப்பட்டு அவளை அணைத்துக் கொண்டான் மலரவன். அதை பூங்குழலியும் உணர்ந்தாள். சிறிது நேரம் வரை அவன் அணைப்பில் கிடந்த அவள்,
"எனக்கு குறி வைச்சிருக்காங்களா, மலர்?" என்றாள் மெல்லிய குரலில்.

VOCÊ ESTÁ LENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...