3 அதிர்ச்சி செய்தி

3.2K 77 5
                                    

3 அதிர்ச்சி செய்தி

விஷயத்தை உடைப்பில் போடாமல், தில்லைராஜனிடம் கூறிய படியே தனது வக்கீலிடம் பேசினார் மணிமாறன். விஷயத்தை கேள்வியுற்ற அவரது வக்கீல் பூபதி, அதிர்ச்சி அடைந்தார்.

"இது ரொம்ப சிக்கலான பிரச்சனை. இது சம்பந்தமான பேப்பர்ஸை எல்லாம் எனக்கு உடனே அனுப்ப சொல்லுங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் எல்லா சொத்தையும் அவரோட ஒய்ஃப் பேர்லயும், டாட்டர் பேர்லயும் மாத்தி எழுத வேண்டியது அவசியம். ஏன்னா, இதுவே ரொம்ப லேட். கடந்த ஆறு மாசமா, வாங்குன லோனுக்கு இஎம்ஐ கட்டாம இருக்காரு கைலாசம். எந்த நேரமும் தில்லைராஜன் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும்"

"நீங்க சொத்துக்களை மாத்துறதுக்கு தேவையான எல்லா பேப்பர்ஸையும் ரெடி பண்ணுங்க. தில்லைராஜனோட  சொத்து விவரங்களை இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் உங்களுக்கு அனுப்புறேன்"

"சரிங்க சார்"

"சொத்துக்களை மாத்தி எழுதறதுனால தில்லைராஜனுக்கு எந்த பிரச்சனையும் வராதே?"

"நிச்சயம் வரும் சார். அவரை போலீஸ் அரெஸ்ட் செய்வாங்க. ஆனா அதை நம்ம பாத்துக்கலாம். குறைஞ்சபட்சம் நம்ம அவரை சொத்தையாவது காப்பாத்தலாம்"

பெருமூச்சு விட்டார் மணிமாறன்.

"நமக்கு வேற சாய்ஸ் இல்ல சார். இல்லன்னா, ஒரு நயா பைசா விடாம அவர் இழக்க வேண்டி இருக்கும்"

"சரி"

அழைப்பை துண்டித்து விட்டு, உடனடியாய் தில்லைராஜனுக்கு ஃபோன் செய்தார் மணிமாறன். ஆனால், அவரது அழைப்பை தில்லைராஜன் ஏற்கவில்லை. அது மணிமாறனுக்கு கலக்கத்தை தந்தது. அவரிடம் காப்பி குவளையை தந்த மின்னல்கொடி,

"ஏன் டென்ஷனா இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?" என்றார்.

"தில்லை என்னோட ஃபோனை எடுக்க மாட்டேங்கிறான்" என்றார் சங்கடத்துடன்.

"ஏதாவது வேலையா இருந்திருப்பாரு"

"இல்ல, அவன் எப்படியும் என்னோட காலை அட்டென்ட் பண்ணுவான். பிஸியா இருந்தா, ஒரு மெசேஜாவது போடுவான்"

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now