சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -42

1.1K 62 46
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின்
மேலிருந்தேன் காலை பனியாக
என்னை வாரிகொண்டாய் 
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ஆருத்ரன் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான். அப்போது இவ்வளவு நேரம் இல்லாமல் திடீரென அந்த குளுமையான இடத்திலும் ஆருத்ரன்க்கு குளிர்ந்த காற்று தீண்டாமல் இருப்பது போல் இருந்தது. எனவே சட்டென்று கண்களை திறந்து பார்க்க வாசுகி முகம் அவன் முகத்துக்கு அருகில் இருந்தது. ஆருத்ரன் முகத்தை தென்றல் தீண்டுவதற்கு பதிலாக அவள் சூடான மூச்சு காற்று தீண்டி கொண்டிருந்தது. அவள் கண்கள் மூடி இருந்தன. அவள் சீராக விடும் மூச்சு அவள் நன்றாக உறங்கி கொண்டிருக்கிறாள் என்பதை உணர்த்தியது.ஆருத்ரன் கண்கள் ஏனோ இன்று அவள் கண்கள் மூடி இருந்ததால் அவள் இதழ்கள் பக்கம் தாவியது.அவள் வேறு உறக்கத்தில் இன்னும் குனிந்து நெருங்கிவர. வீரர்கள் சிறை செய்யும் நோக்கோடு தன்னை தாக்க வரும்போது கூட பதட்டம் கொள்ளாத ஆருத்ரன் இதயம் இப்பொழுது இதழ் சிறைசெய்து விடுமோ என்று பதட்டம் கொள்ள ஆரம்பித்தது.ஆருத்ரன் நினைத்து இருந்தால் விலகி சென்று இருக்கலாம் ஆனால் அவன் விலகி செல்லவில்லை. அவன் என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆவலாக இருந்தான் அவன் மனமும் உனக்கு இல்லாத உரிமை என்ன என்று சொல்லி அவன் எண்ணதுக்கு பச்சை கொடி காண்பித்ததது.வாசுகி உறக்கத்தில் நன்றாக அவன் கிட்ட வர யார் கண் பட்டதோ அவள் உறக்கம் கலைய ஆரம்பித்தது அவள் இமை அசைவை வைத்து  அவள் உறக்கம் கலைகிறது என்பதை உணர்ந்த ஆருத்ரன் சட்டென்று கண்களை மூடி விட்டான். உறக்க கலகத்தில் கண்ணை திறந்த வாசுகி ஆருத்ரன் முகம் தன்னுடைய முகத்துக்கு அருகே இருப்பதை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவள் தன்னை சமாளித்து கொண்டாள்.இல்லை என்றால் அதிர்ச்சியில் அவனை தள்ளி விட்டிருப்பாள். அந்த அதிர்ச்சி அவள் உறக்கத்தை மொத்தமாக கலைத்து இருந்தது. பிறகு ஆருத்ரனை கொஞ்சம் நேரம் அப்படியே பார்த்து கொண்டு இருந்தாள்

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now