மாலை ஏழாகி இருந்தது. அன்று வானம் ஒருமாதிரியாக இருட்டிக் கொண்டிருந்தது. மழை வரும் அறிகுறியுடன் சுழற்றி அடித்த காற்றில் பாலிதீன் பைகள் எல்லாம் ரோட்டில் பறந்து கொண்டிருந்தன.
"மழ வரும் போலிருக்கே... ரிஸார்ட்டுக்குப் போறதுக்குள்ள பெரிய மழ புடிச்சிக்கிட்டா நனைஞ்சுடுவமே?" என்ற யோசனையுடன் டீக்கடையில் பால் குடித்த படி ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெயன்.
"ண்ணா... ஒரு எட்டு டீ பார்சல்! நம்ம பசங்களுக்கு எடுத்துட்டுப் போறேன் அதுனால நல்லா ஸ்ட்ராங்கா டேஸ்டா போட்டுக் குடுங்கண்ணா! கேன்ல குடுத்துருங்க. நான் ராத்திரி வரும்போது கேன திருப்பிக் குடுத்துர்றேன்!" என்று சொல்ல
பத்து வருடங்களுக்கு மேல் தன்னிடம் வாடிக்கையாக தேநீர் வாங்கும் ஜெயனை சற்று அதிக நேரம் காக்க வைத்தாலும் அவன் கேட்டது போல் நல்லபடியாக தேநீரைப் போட்டு கேனில் ஊற்றிக் கொடுத்தார் அந்தக் கடைக்காரர்.தேநீருக்காக நின்ற நேரத்தில் சற்று தாமதமாகி விட தன்னுடன் வேலை பார்க்கும் தம்பிகள் வெறும் வயிறுடன் கிளம்பி விடக் கூடாதென்ற அக்கறையில்
அரக்க பரக்க ரிஸாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் ஜெயன். அவன் ரிஸாட்டை அடைந்ததும் தூறலாக பெய்து கொண்டிருந்த மழை சற்று பெரிதாக பிடித்துக் கொண்டது.மழை வருது மழை வருது
குடை கொண்டுவா
மானே உன் மாராப்பிலே
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே
பொழிந்தாய் தேனேஎன்று தனது மொபைலில் வைத்த சிச்சுவேஷன் பாடலுடன் ரிஸாட்டின் வாசலில் ரிலாக்ஸ்டாக ஒரு சேரில் அமர்ந்து தானும் அலைபேசியுடன் இணைந்து பாடிக் கொண்டிருந்த நஸார் தான் தன்னுடைய நண்பனைப் பார்த்து விட்டு அவனிடம் கையசைத்தான்.
"நீ எங்கடா இங்க?" என்று கேட்ட படி தன்னுடைய பைக்கிற்கு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய படி கேட்ட ஜெயனிடம்,
YOU ARE READING
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
Romanceஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன...