நிலைக்கண்ணாடியோ
தெளிந்த நீர்பரப்போ
பிதிபலிப்பது
உங்களின் முகம்தானென
நிச்சயமாய் தெரியுமாஇந்த முகம்
இருப்பது உங்களின்
முன்பக்கமா
அல்லது மறுபக்கமாதேவை...கொடு.....
திருப்பித்தருகிறேனென
வாங்கும் போது
கொண்ட முகத்தை
திருப்பித்தரும்போது கொண்டிருந்தீர்களா..காதலிக்கும்போது
கொண்ட முகத்தைத்தான்
காமுறும்போதும்
கொண்டிருந்தீர்களாஉண்மைகளை
உறக்கச்சொன்ன
முகத்தோடுதான்
உங்கள் பொய்களையும்
சொன்னீர்களாஉலகவெளிச்சங்களில்
தெரிந்ததே ஒருமுகம்
அதேதான்
உங்கள் உள்மன இருட்டிலும்
தெரியுமாபிரதிபிம்பங்களை விட்டுவிட்டு இருளில் நீங்கள் கொண்ட
முகத்தோடு வாருங்கள்
அந்தகார இருட்டின்
ஏகாந்தத்தில்
நாம் உண்மையின்
பக்கத்தில் நின்றபடி
உரையாடிக் களிப்போம்.
![](https://img.wattpad.com/cover/78651543-288-k745593.jpg)
YOU ARE READING
கோட்டோவியங்கள்
Poetry~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்