நீலகண்டம்.

45 6 1
                                    

ஆழியில் பெருக்கெடுத்த
பெருங்காமத்தை
அள்ளி விழுங்கியபோது
தொண்டையை அழுத்தி
அதை அங்கேயே நிறுத்தி
எனை வலமொரு பாகமாய்
கொண்டாய் நீ.

நித்தம் நித்தம்
நீயொரு பாகனாய்
பெருங்காதல்
கொண்டாடிய போதும்
கண்டத்தில் நீலமாய்
மின்னிக் கொண்டிருக்கிறது
அந்த ஆலகாலம்.

கோட்டோவியங்கள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang