தூரத்தில் கேட்கிறது
துயரத்தில் இசைக்கும்ஓர் ஆலாபனை பாடகனின்
முகாரி ராகங்கள்.
நிலவைக் காட்டி ஊட்டிய வட்டமுதை மறுதலித்து
முலைப்பாலுண்ட அயர்சியில்
தொட்டிலில் தூங்குகிறது நம்
குழந்தை.
நீயில்லாத இந்த இரவுகளில்
நாம் கூடிக்களித்த கட்டிலின்
கேலிகளில் தூக்கமின்றி
விடிகின்றன பொழுதுகள்.பொருள்வயின் பிரிவில்
உன் அருகாமை
அனுதினமும் வாய்க்காது
எனத்தெரிந்தும்
அதனையே ஆராதிக்கிறது
அபலையாய் இந்த மனது.

ESTÁS LEYENDO
கோட்டோவியங்கள்
Poesía~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்