கிண்ணத்தில் குவியும்
சாமபல் துகள்களாய்
எனையெறித்தேயழிக்கிறது
மனப்பொந்திடை நுழைந்த
அக்னிக் குஞ்சாய் உன் காதல்.நானொரு ஆலாபனைப் பாடகன்.
என் ஆதாரச் சுருதிகளெலாம்
நீதான்.சிறுதூர இரயில் பயணங்களில் பாடும் விழியற்ற பாடகனைக் கடப்பதைப் போலவே
சடுதியில் கடக்கிறாய்
கனத்த மௌன மொழிபேசும்
விநாடிப் பார்வைகளில்.உன் நிராகரிப்புச் சிலுவைகளில்
மரித்த என் காதல்
இரண்டாம் நாளே
உயிர்த்தெழுந்து விடுகிறது
முன்பை விட அதி வீரியமாய்.

VOCÊ ESTÁ LENDO
கோட்டோவியங்கள்
Poesia~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்