முத்தத்தைக் கேட்டேன்
புறமுதுகு காண்பிக்கிறாய்.
பின்னங்கழுத்தில்
நான் கொடுக்க நெருங்குகிறேன்.
வெடுக்கென எழுகிறாய்.நான் கேட்பதும் நீ தருவதும்
இதுவொன்றும் முதன்முறையல்லவே
இன்றென்ன புதிதாய்
ஒரு வெட்கம்.வெட்கத்தை விட்டு வீரங்கொள்.
ஒரு முத்தத்தைக் கொடுத்து
அந்த யுத்தத்தைத் தொடங்கு.
இது இருவருக்குமான இரவு.வா இருவருமே வாகைசூடுவோம்.
![](https://img.wattpad.com/cover/78651543-288-k745593.jpg)
YOU ARE READING
கோட்டோவியங்கள்
Poetry~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்