கலை... வீடு வருகையில் மணி மூன்றை கடந்திருந்தது... ஒரு அரை மணிநேரம் கடந்த நிலையில் , கீர்த்தி வந்துவிட்டாள் அவளது வீட்டிற்கு...
" ஹேய் வீடு சுத்தம் செய்யனும் னு சொன்ன... எல்லாம் அப்படி அப்படியே இருக்கு..." என்றாள். இவளிடம் சொல்ல முடியுமா... அஷ்வந்தை பார்க்க போனதை...
"முடியலைப்பா... அதுனால படுத்துட்டேன்..."" ஏன் கலை இன்னைக்கு dutyக்கு போகலை...நிறையா லீவ் எடுக்குற... அதுவே teamல complain rise பண்ணியிருக்காங்க... இன்னைக்கும் நீ போகலை... எப்படி சமாளிக்க போற... "
தோழியின் சூழ்நிலையறிந்ததால் மிக கவலையாக வினவினாள்... அவளது அக்கறையில் நெகிழ்ந்தவள்... சன்னமா இதழ் சிரித்து ,
" வேற வேலைக்கு try பண்ணீட்டு இருக்கேன்..."
" என்ன.... ஏன்..."
" முடியல கீர்த்தி அவனுடைய டார்ச்சர்..." , உடன் பணியாற்றும் பொறுக்கியால் இந்த முடிவு என்றாள் .
" எலிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியுமா... புது இடத்திலையும் problemன்னா அங்கேயும் வேலைய விடுவியா...? "
அவளிடம் பதில் இல்லை...நடந்ததை கீர்த்தியிடம் கூறவும் விருப்பமில்லை....
" ச்சே... ஏன் கலை இவனுங்கயெல்லாம் இப்படி இருக்கானுங்க... " என்றவளிடம்
" யாரை சொல்ற...? "
" வேற யாரு... உன்கிட்ட வாலாட்டற பொறுக்கியும்... என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் திரிஞ்ச பொறி..க்.. " என்று முடிப்பதற்குள்ளாக...
" கீர்த்தி... " தன் குரலை உயர்த்தியிருந்தாள் கலை .
" யாரை... யாரோட சேத்து பேசுற... அஷ்வந்தும் அந்த நாயும் ஒண்ணாயிட முடியுமா.... " என்று தன் கோபம் குறையாமல் வாதாடியவளிடம்
" ஏன்... அவன் என்ன யோக்கியம்... என்னை marriage பண்ணிக்கிறேன் ஏமாத்தினவன் தான.... நீ ஏன் அவனுக்காக பேசுற " என்றாள் கீர்த்தி கோபம் குறையாமல்...
" உளறாத கீர்த்தி... அந்த பண்ணாடையோட compare பண்ணாதன்னு தா சொல்றேன்..."

BẠN ĐANG ĐỌC
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Lãng mạnதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...