உணர்விலே கலந்தவனே - 45

2.3K 58 6
                                    

பகுதி - 45

பெண்ணவளை மடியில் அமர்த்திக் கொண்டவன்... பின்னங்கழுத்தில் கை கொடுத்து முடியோடு பற்றியிழுத்து... விலக இருந்த மலரிதழ்களை தன் வசப்படுத்தி.... கொய்து கொண்டவனுக்கு... மிகவும் பிரியத்துடனே இசைந்து கொடுத்தாள்...

அவனுடைய சட்டையை இறுக்கமாக பற்றி... இருவரும் ஒருவருடைய சுவாத்தை மற்றவர்களுக்கு பரிமாறி... உலகையே மறந்த நிலையில் இருக்க... மனைவியின் அருகாமையே அவனை தூண்ட செய்யும்... அப்படியிருப்பவனுக்கு அவளுடைய நெருக்கத்தில் எப்படி இருப்பான்... இதழில் தொடங்கி... கழுத்தில் இளைப்பாறி... கரங்களோ... அதன் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரள... பூவையாலும்... ஒத்துழைக்கவே... காட்டாற்று போல் பொங்கியவன்... இஷ்டத்திற்கு கரைபுரண்டோடியவனாக.... இருந்தான் .

இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் அப்படியே இருந்தாலும்... கலையின் மனதில் மண்டிக்கிடந்த பயம்... தன் கணவனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்ததிலிருந்து... அகன்றிருக்க... நெருங்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில்... அவன் நடந்து கொள்ளும் முறையால் அனைத்து பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டதென்றே கூற வேண்டும்...

இவை அனைத்திற்கும் முத்தாய்பாய்... இப்பொழுது தன்னிடம் காட்டும் இந்த நெருக்கத்தில்... சிறகில்லாமலே அவன் அன்பில் கறைந்தாள்... தாகம் தணிக்க அவளிடமிருந்து தீர்த்துக் கொண்டிருந்தவனுக்கு... தணிந்தபாடில்லாமல்... அதிகரித்து கொண்டே இருக்க... பறுக வழங்கியவளுக்கு வற்றி.. மூச்சு திணறல் ஏற்படவும்... விருப்பமேயில்லாமல் விலகியவனை முகம் பார்க்க முடியாமல்.. எழுந்தோடியவளை பார்த்து சிரித்தவன்...

வெளியேறுவதற்காக கதவில் கை வைத்தவளிடம்... " ஓய்... இது பத்தாது.."  என்று குரல் கொடுத்தான்... ஆங் என்று அதிர்ச்சியில் விழிவிரித்தவளை நெருங்கி இடையில் கரம் கோர்த்து... அருகே இழுத்தவன்..." என்ன... ஓகே சொல்லிட்டு ஓடிப் போற... " என்று கிறக்கமாக அவன் குரல் ஒலிக்க...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora