இரு மனித மிருகங்கள்… தாங்கள் இருக்கும் இடத்தைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல்… உதடுகள் பின்னிப் பிணைந்திருக்க… கரமோ மற்றவர்களின் உடல்கள் மீது அத்துமீறி தடவியவாறு அந்த பார்ட்டியில் இருந்தது…
தள்ளாடிய நடையுடன்... இருவரும் மாடியில் இருக்கும் அறைக்குள் நுழைந்த உடனேயே... தாழிட பொறுமையற்றவர்களாக…. ஆடைகளை கலைந்து இச்சையில் ஈடுபட….
கட்டிலில் ஆடிய ஆட்டம் ஓய்ந்ததும் … முதலில் மயக்கம் தெளிந்தவள்….. தன்னை சுத்தம் செய்து வெளி வந்த பிறகே... அந்த அறையில் திக்குக்கு ஒன்றாய் கிடந்த ஆடைகளை எடுத்தாள் ஷாக்க்ஷிதா.
அவளது அசைவில் விழித்த... அவளது நண்பர்களுள் ஒருவனான விதுர்… வெற்று உடலுடன் நடமாடும் அவளை பார்த்ததும் மீண்டும் போதையுடன் நெருங்க… அவனை தடுத்து.. no… என்றவளின் அதிகாரத்தில்… கிளந்தெழுந்திருந்த மோகம் காணாமல் போயிருக்க…. பாத்ரூமுக்குள் சென்று மறைந்தான் .
அவன் வெளி வரவும்… மோகன சிரிப்புடன் பார்க்க… no babe ..
என்னை அப்படி பாக்காத… என்று அவன் கெஞ்சியதும்… ஆணவமாக சிரித்தவள்… " நான் கிளம்புறேன்… flight க்கு டைம் ஆச்சு" என்றாள் ." ஹேய்… r u serious… going to marry him…" என்று நம்பமுடியாமல் வினவ…
தயக்கமே சிறிதுமின்றி நிகிலின் மீதான தாபத்தை வெளியிட்டவள்… பெங்களூருக்கு புறப்பட்டும் விட்டாள் .இந்தியாவிலேயே... மிகப் பெரிய நிறுவனத்தால் நடத்தப்படும் உலக அளவிலான ஓவியப் போட்டி... அதில் , இறுதிச்சுற்றுக்கு ஜூனியர் பிரிவில்.... உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் 286 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க.... அதில் தேவ்தரணும் ஒருவனாகி இருந்தான்.
அவன் பயின்ற பள்ளியிலேயே , ஐந்து குழந்தைகள் தேர்வாகி இருந்தார்கள் . ஜூனியர் பிரிவில் இரண்டு மற்றும் சீனியர் பிரிவில் 192 குழந்தைகளில் மூன்று என்று இருக்க... பிள்ளைகளை பெற்றவர்கள் மட்டுமல்ல... அக்குழந்தைகள் படித்த பள்ளி நிர்வாகமே பெருமையில் திளைத்திருந்தது .

KAMU SEDANG MEMBACA
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romansaதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...