பாகம் 7
சமையலறையில் நிமல் இருந்ததைப் பார்த்து, உள்ளூர நகைத்தார் பார்வதி. அவன் தேங்காய் பால் தயாரித்ததை பற்றி, ஏற்கனவே கோபாலிடமிருந்து தெரிந்து கொண்டு விட்டார் பார்வதி. மெதுவாய் அவன் பின்னால் வந்து நின்று இருமினார். தன் கண்களை மூடி, நாக்கை கடித்தான் நிமல்.
" நான் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா, நிம்மு? " என்றார்.
" வேண்டாம் மா. நான் முடிச்சிட்டேன்." என்றான் தன்னை நிலை படுத்திக்கொண்டு.
"நீ, இந்த காதலை... அதாவது இந்த பாலை யாருக்காக எடுக்கிறேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? " என்றார் கிண்டலாக.
தன் கண்களை சுழற்றினான் நிமல்.
" என்னோட ஃபிரண்டுக்கு மா "
" கேர்ள் ஃபிரண்டா? "
" ஃபிரண்டு... அவ ஒரு கேர்ள்"
" ஓ... என் ஜி எஃப்...? அந்த ஃபிரண்ட் வர்ஷினி தானே? "
" ஆமாம் "
அவர் மீண்டும் கிண்டலாய் இருமினார்.
" அம்மா, இல்லாத கதையை நீங்களே பில்டப் பண்ணாதீங்க "
" அப்படின்னா இருக்கிற கதையை நீயே சொல்லு "
" அவளுக்கு அல்சர் இருக்குமா "
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தார் பார்வதி.
"என்னது? அல்சரா? இந்த சின்ன வயசுலயா? எப்படிடா? அவங்க அம்மா, அவளை ரொம்ப பொத்தி பொத்தி பார்த்துக்குவாங்கன்னு சொன்னீயே..."
" அவங்க அம்மா ஒரு சமூக சேவகி. அவங்க எப்போதும் பிஸியாக இருப்பாங்க போல இருக்கு. அதனால தான் அவளை பாத்துக முடியலன்னு நினைக்கிறேன் "
" எனக்கு வாயில நல்லா வருது... பெத்த பொண்ண பாத்துக்க நேரமில்லையாம்... ஊருகேல்லாம் சமூக சேவை செய்யறாளாம்... என்ன பித்தலாட்டம் டா இது? "
" அவங்க அம்மாவை எப்பயாவது பார்க்கும் போது, இதெல்லாம் நீங்களே அவங்களை கேளுங்க" என்றான் சிரிப்புடன்.
" ஏன் கேட்க மாட்டேன்? அந்த அம்மாவை நான் நேர்ல பார்த்தா, நிச்சயமா கேப்பேன். எனக்கு என்னமோ அவங்க அம்மா, உண்மையிலேயே அந்த பொண்ணை நல்லா கவனிச்சுக்குற மாதிரி தெரியல. அவ உண்மையிலேயே ஏதோ பிரச்சனைல தான் இருக்கா போல இருக்கு. ( அவன் கன்னத்தை அன்பாய் தொட்டார் ) அவளுக்கு ஏதாவது வேணும்னா என்னை கேக்க சொல்லுடா... நான் எதுவா இருந்தாலும் செய்யறேன். "