Part 38

1.5K 94 11
                                    

பாகம் 38

காஞ்சிபுரம்

(பார்வதியின் தங்கை தாட்சாயணியின் இல்லம்.)

தங்களுடைய அம்மா தவிரமாய் யோசித்து கொண்டிருந்ததால், பிரகாஷும், ஆகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டர்கள்.

 "என்னம்மா யோசிச்சுகிட்டு இருக்கீங்க?" என்றான் பிரகாஷ்.

"சுதாவோட பேரன்ட்ஸ், அவ கல்யாணம் சென்னையில நடக்கணும்னு ஆசைப்படுறாங்க. ஏன்னா, அவங்க பெரியம்மாவால ரொம்ப தூரம் டிராவல் பண்ண முடியாதாம்..."

"அதனால என்னமா?"

"ஏற்கனவே எங்க அக்கா குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சினை இருக்கு. அவங்க அதை எல்லாம் இன்னும் சரி செய்யல. நம்ம வேற அவங்களுக்கு தொல்லை கொடுக்கணுமான்னு தான் யோசிக்கிறேன்..."

"உண்மைய சொல்லப் போனா, இந்த நேரத்துல தான் நம்ம அவங்க கூட இருக்கணும். அவங்களுடைய பிரச்சினைகளை சமாளிக்க, நம்ம அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம் இல்லையா?" என்றான் பிரகாஷின் தம்பி ஆகாஷ்.

"ஆகாஷ் சொல்றது சரி தான் மா. நம்ம அவங்க கூட இருந்தா, பெரியம்மா நிச்சயம் சந்தோஷம் தான் படுவாங்க. அதோட மட்டும் இல்லாம, வர்ஷினியும் சுதாவும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ். சுதா நினைச்சா, நிச்சயம் வர்ஷினியோட மனசை மாத்த முடியும்"

"ஆமாம்மா. பாசிட்டிவா திங்க் பண்ணுங்க"

"ஆனா, நீங்க ரெண்டு பேரும், ஒரு முக்கியமான நெகட்டிவ் பாயிண்டை விட்டுட்டீங்க"

பிரகாஷும் ஆகாஷும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

"சந்திரா... நிமேஷ்... அவங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டாங்க. நிமல்னு வந்துட்டா, சும்மா இருக்க அவங்களால முடியாது. அவனை இன்சல்ட் பண்ண சான்ஸை எதிர்பார்த்துக்கிட்டே இருப்பாங்க. இந்த கல்யாண சந்தர்ப்பத்தை, அதுக்கு அவங்க பயன்படுத்துவாங்க. எங்க அக்காவும் மாமாவும் கவலைப்படுறதை என்னால பாக்க முடியாது"

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)Where stories live. Discover now